கோவை தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேல் கூரை இழந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீண்டும் மோடி தான் பிரதமர் என்றும், 400 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும், காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கூட பெறாது என புதுச்சேரியில் இரண்டாம் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பாக பேசியுள்ளார்.
கள்ளழகர் மீது அதிக விசையுள்ள பிரஷ்சர் பம்புகள் மூலம் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்ச தடை விதிக்கக்கோரி வழக்கில், மதுரை மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தன் நாட்டின் குடிமக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது சவுதி அரேபியா. அதன் ஒரு பகுதியாக சில வேலைகளில் வெளிநாட்டவருக்கு வாய்ப்பில்லை எனவும் எந்தெந்த வேலையில் எத்தனை சதவிகிதம் சவுதி குடிமக்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவித்து இருக்கிறது.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவுக் கடைகள், நீர் மோர் பந்தல்கள் மற்றும் அன்னதானம் செய்வோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
தலைநகர் டெல்லியில் நண்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதத்தினால் நண்பன் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கிறார் நேகி. சம்பவ இடத்திலே அவரது உயிர் பிரிந்துள்ளது. ஆனால், நேகி தற்கொலை செய்திருக்கமாட்டார் என குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மோசடி வழக்குகள் என் மீது இருப்பதாக திட்டமிட்டு அரசியல் காரணத்திற்காக அவதூறுகளை பரப்புகிறார்கள் என நெல்லை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் பேட்டி அளித்துள்ளார்
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக கடந்த மார்ச் 21 கைது செய்யப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இன்றோடு காவல் முடியவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையின் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு வழங்கும் 1000 ரூபாய் பணத்தில் க்ரீம், பவுடரெல்லாம் வாங்கி பூசி பெண்கள் பளபளவென்று இருப்பதாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. கதிர் ஆனந்தின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது போன்று அஜித் குமார் தன் முதல் பட ஹீரோ இல்லை என ஜோதிகா கூறியிருக்கிறார். என் கணவர் சூர்யா தான் என் முதல் பட ஹீரோ என்கிறார் ஜோதிகா. அது எப்படி என்றும் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
நீண்ட காத்திருப்பிக்கு பின் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஆடு ஜீவிதம் படம். பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.
சித்தார்த்தும், அதிதி ராவ் ஹைதரியும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் உண்மை தெரிய வந்திருக்கிறது. தங்களுக்கு திருமணம் நடக்கவில்லை ஆனால் மோதிரம் போட்டுக் கொண்டோம் என்கிறார் சித்தார்த்.
மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம் வேட்புமனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.பி தயாநிதி மாறன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.