நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான சிவகார்த்திகேயன் புராடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் பெயர் குரங்கு பெடல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மதுபானக் கடை மற்றும் வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமல்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
LSG vs CSK Dream11 Team: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா லக்னோ? அல்லது ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இண்டியா கூட்டணிக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறும்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. பிற மாநிலங்களில் இந்த பழக்கமில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று காலை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்த தி.மு.க முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சேலம் தொகுதி தனது கோட்டை என சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என்.நேரு சேலத்தில் செல்வகணபதி நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் பா.ஜ.க டெபாசிட் இழப்பார்களா என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் எனப் பேசினார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்குபணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.நேர்மையான திறமையான ஆட்சியை மோடி தந்துள்ளார்.மக்களின் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது
பா.ஜ.க குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும்.கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பா.ஜ.க.விற்கு கிடைக்கும்.அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது அண்ணாமலை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி.
இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.இந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும். கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார். 400 எம்.பி.க்களில் இவரும் ஒருவராக இருப்பார்.தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்குபணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள்
பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அதிகாரிகள் நடக்கவில்லை. வெளிப்படையாக தி.மு.க அ.தி.மு.க பணம் கொடுக்கிறார்கள். அதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக பணம் கொடுப்பது வெளியே வராமல் இருக்க , ஆட்களை செட் பண்ணி பா.ஜ.க பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும்என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
அந்த வகையில், திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளி பாகம் எண் 214 - ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில்காத்திருக்கின்றனர். சுமார் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறாததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trichy | Lok Sabha Election 2024: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்சல் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ப.குமார் இன்று காலையில் வாக்களிக்க சென்றார்.
அப்போது, வாக்குச்சாவடி மையத்துக்குள் வரிசையில் நின்று அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வாக்குப்பதிவு மையம் அருகே வந்தனர். அந்த தருணத்தில் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்து வெளியேறுமாறு கூறினர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆவேசம் அடைந்த முன்னாள் எம்பி ப.குமார் தெரிவிக்கையில்:- "நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்.பி யாக இருந்திருக்கிறேன். வி.ஐ.பி-கள் வாக்களிக்கும்போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. வாக்குப் பதிவு மைய அலுவலர்கள் முறையாக நடைமுறைகளை தெரிந்து கொண்டு வாக்கு பதிவு மையத்தில் பணியாற்ற வேண்டும். நான் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்க வருகிறேன் எனச் சொல்லி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
அதே நேரம், அவருடன் வந்த அ.தி.மு.க பிரமுகர்கள், இன்று காலை மக்கள் மன்றத்தில் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு வாக்களிப்பதை படம் எடுக்க அனுமதித்த தேர்தல் அலுவலர்கள் அ.தி.மு.க வி.ஐ.பி-களை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன் என தெரியவில்லை. தேர்தல் ஆணையம் அடையாள அட்டை வழங்கியது ஏன்? என தெரியவில்லை எனக் கூறியவாறு அவர்களும் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவுகிறது." என்று அவர் கூறினார்.
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேநேரம் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர்,“மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை. நாம் ஓட்டு போடுவதோடு, அனைவரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனை உணர்ந்த ஒரு முதலமைச்சர், ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு, காரை தானே ஓட்டிக் வந்து வாக்களித்துள்ளார்.
கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
வாக்களித்த பின் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும். எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்து உள்ளேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள். அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும்.
தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும். முழுமையாக நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறம் சார்ந்த வேள்வி எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
அப்போது, இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “நல்ல பாடம் என்றால் முதல்வர் சொன்னபடி பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும்”என்று தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.வி.எம் எந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடிக்கு தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
எப்போதும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் நடிகர் அஜித், இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துள்ளார். தனது வாக்குச்சாவடியான திருவான்மையூர் மாநகராட்சி பள்ளிக்கு வந்த நடிகர் அஜித் 30 நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
தே.மு.தி.க கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகனும், விருதுநகர் தொகுதியின் வேட்பாளருமான விஜயபிரபாகரன். இளையமகன் சண்முகப்பாண்டியன் ஆகியோருடன் சென்னை சாலிகிரமம் பகுதியின் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த தென்சென்னை தொகுதியின் பா.ஜ.க.வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் – பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் விஜயகாந்த் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழிசை, ஒரு வேட்பாளராக பெருமை மிகு வாக்காளரை சந்தித்தில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
தனது சொந்த் ஊரான சேலம் மாவட்டம் சிலுவைபாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,புதிய தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், இளையஞர்கள் என அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றுகேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது வாக்கை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் உறுதியாக வெற்றி பெறுவேன். அ.தி.மு.க உங்கள் பக்கம் வரும். 2026-ல் அம்மாவின் ஆட்சியை நாங்கள் அமைப்போம். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் ஒரு தேர்தலாக இது அமையும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
“இது சாதாரண தேர்தல் அல்ல. நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார்.
Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் முற்றிலும் பெண் அலுவலர்களே பணிபுரியும் ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியகுளம்
வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸா ருக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்தது. மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தலைமை வகித்து பேசியதாவது