ஐஏஎஸ் தேர்வுக்குரிய விண்ணப்பப் படிவம் வெளியாகி உள்ள நிலையில் அதுகுறித்த அறிவிப்புகளையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC IAS 2023 தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் இன்று வெளியாகி உள்ளது. இந்த தேர்வு குறித்த விவரங்களான தகுதி, தேர்வு முறை, காலியிடங்கள், பாடத்திட்டம், தேர்வு தொடர்பான விதிகள், விருப்பப் பாடங்களின் பட்டியல் என அனைத்து விவரங்களும் அதன் இணையதளத்தில் கு
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பாகிஸ்தான் நபர் ஒருவர், நகைச்சுவையாய் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்படி, வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 7.5
தனித்துவமான கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த நவாசுதீன் சித்திக் அண்மைக்காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். ஏனெனில் அவரது மனைவி ஸைனப் என்கிற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.அதில், “வீட்டில் இருக்கும் ஸைனப் என்னுடன் அத்துமீறி பேசுவது, காயப்படுத்துவது, தாக்கி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்” என கூறியிருக்கிறார்.
நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை அதிகம் மற்றும் குறைவு எனப் பார்ப்போம்.2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில்
மூன்று மாதங்களுக்கு பின் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வு துவங்கி நடந்து வருகிறது.முல்லை பெரியார் அணையின் துணை கண்காணிப்பு குழுவினர் தேக்கடியில் இருந்து தமிழக அரசின் கண்ணகி படகு மூலமும் கேரளா அரசின் வனத்துறை வேகப்படவும் மூலமும் முல்லை பெரியாறு அணைக்கு கிளம்பி சென்றனர்.மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளராக இருந்த சரவணகுமா
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுகிறார்.தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்ச
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய பெண் வீரர் என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. அவரைப்பற்றிய ஓரு சிறு தொகுப்பைப் பார்க்கலாம். இந்தியாவிலிருந்து முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண் வீரர் என்ற பெருமையை பெற்றவர் கல்பனா சாவ்லா. இந்தியாவில் ஹரியானா மாநிலம் கர்னலில் மார்ச் 17, 1962ஆம் ஆண்டு பிறந்தார். கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் பயின்ற கல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் 10 முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் பயன்பாடு, பசு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்கிடையே `தென்னரசு நன்கு அறிமுகமான வேட்பாளர்’ என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான
வடமதுரையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சவுந்தர்ராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷே
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் உரையின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:“ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல், இளைஞர் சக்தி, நிதித்துறை உட்பட மொத்தம் 7 முக்கிய அம்சங்களில் இந்த பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வ
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் சில விவரங்கள் இங்கே:“தொலைக்காட்சி, செல்போன், கேமரா உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது (இதன்மூலம் அவற்றின் விலைகள் குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது). வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்
21ம் நூற்றாண்டின் உலகின் ஆகப்பெரும் தொற்றுநோயாக 2019ம் ஆண்டின் டிசம்பரில் அறிமுகமான கொரோனா வைரஸ் 3 ஆண்டுகள் முழுமையடைந்த பிறகும் இதுகாறும் தொற்று பரவல் முற்று பெறவில்லை.பொதுவாக நாசி வழியாகவோ அல்லது தொண்டை வழியாகவோ சளி மாதிரி எடுத்து பரிசோதித்த பிறகே ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்ற நடைமுறையை மருத்துவ உலகம் பின்பற்றி வருகிறது. இதனை உடனடியாக அறிந்துகொள்ள ரேபிட் கருவிகளும்
அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது வழக்கம், ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் துப்புரவு பணிகளை செய்ய ஆட்கள் இருந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், சென்னை திருமு
2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இதில் மின்சார வாகன புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) செய்யும் நிறுவனத்தின் ஆர் & டி தினேஷ் அர்ஜூன் நம்மிடையே பேசினார். அவர் கூறியவை:“புத்தொழில் ந
2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே.நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்தபோது, “கடந்த பட்ஜெட்டுகல் அமைத்த அடித்தளத்தின
பட்ஜெட் குறித்த அறிவிப்பால் சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது. 552 புள்ளிகள் உயர்ந்து, 60,000-ஐ தாண்டி வர்த்தமாகிறது. இந்நிலையில் பட்ஜெட் உரை தொடக்கத்திலேயே `இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும்’ என நிதியமைச்சர் தெரிவித்ததால், எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்தது. இதில் வேளாண் Start-up’களுக்கான கடன் இலக்கு, இனி ரூ.20 லட்சம் கோடியாக உயர்
ராசிபுரம் அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த குடும்பத்தினர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் இவர், கடந்த சில வருடங்களாக நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து பைரவன் மற்றும் பைரவி ஆகிய 2 நாய்களை வளர்த்து வரும் நிலையில், பைரவி என்ற நாய் கர்ப்பமாக உள்ளது.இந்நிலையில், தனது வீட்டி
2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே. அறிக்கை தாக்கலில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், “7 முக்கிய அ
2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே துறையினர் கோரிக்கைகள் என்னவாக இருக்கிறது? இதோ பார்ப்போம்.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி,
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2023- 24ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒட்டுமொத்த உலகமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்குவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாகவும் அடுத்தாண்டில் 6.5%ஆகவும் இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ள நிலைய
கோவையில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், 40 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.பொதுமக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வ
ஈரோட்டில் குடும்பத் தகராறு காரணமாக அக்கா மகன்களை கொலை செய்த தாய்மாமன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனியைச் சேர்ந்த இயற்கை உணவு பொருட்கள் விற்பனை செய்து வருபவர்கள் சகோதரர்களான கௌதம் மற்றும் கார்த்தி, இவர்களை கடந்த திங்கட் கிழமையன்று அவர்களது தாய்மாமன் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். இதனையடுத்து நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் த
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நேர்ந்தது விபத்துதான்; கொலை அல்ல என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் உத்தரகாண்ட் மாநில அமைச்சர் கணேஷ் ஜோஷி.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் மேற்கொண்டார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை சாக்லேட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இந்நிலையில் சிறுமி, தனது தாத்தா, பாட்டியிடம் நடந்தவற்றை கூறியதை கேட்டு அதி
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்த வால் நட்சத்திரத்தை, நமது தலைமுறையும், பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மர்மங்களுக்கும், வியப்பிற்கும் தட்டுப்பாடு இல்லாத நமது பிரபஞ்சத்தில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அதில் ஒன்றாக ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காடுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்த, நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்ததாக சொல்லப்படும் பச்சை வால்நட்சத்திரம்
பல்லடம் அருகே தனியாருக்குச் சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூன்றுமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், குடோனில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை தயாரிக்க பயன்படுத்தும் பழைய சிலிண்டர்கள், கார் இஞ்ச
மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. துர்நாற்றம் வீசும் குடிநீரை குடித்ததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மூன்றாவது மகன் சரவணகுமார் (34). சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள இவர், கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு வீடு திரும்பவில்லை இதைய
“இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 1,55,922 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி இருக்கிறது. இது, இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வசூல்” என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக நிதியமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 1.68 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. இந்த வரி வசூல், இதுவரை காணாத மாதாந்திர உச்சபட்ச வசூலாகும். இதற்கு
“என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்’ மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி ச