மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-ஆவது முறையாக புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-ஆவது முறையாக புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிகழ்வை மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவரது மகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் நேரில் பார்வையிட்டனர்.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது, தொடர்ந்து 5-ஆவது முறையாக 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
தனது பட்ஜெட் உரையின்போது, உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சீரான பொருளாதார வளர்ச்சியுடன் நடைபோடும் இந்தியா, உலகுக்கே ஓர் நம்பிக்கை நட்சத்திரம் என பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகின் முக்கிய நாடுகளுக்கு மத்தியில் அதிகபட்சமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7 சதவீதமாக விளங்குவதாக தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிகழ்வை மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவரது மகள் வாங்மாயி பிரகலா மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் நேரில் பார்வையிட்டனர்.
கர்நாடகத்தில் நெய்யப்பட்ட அமைச்சரின் புடவை: பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவை, "இல்கல் பட்டால் ஆன கர்நாடகத்தின் தர்வாத் மாவட்டத்தில் நெய்யப்பட்ட கைத்தறி புடவை ஆகும்.
தர்வாத் பகுதியில் புவியியல் குறியீடு பெற்ற "காசுதி என்னும் நெசவு கலையைப் பின்பற்றி கையால் நெய்யப்பட்டதாகும். அமைச்சர் அணிந்திருந்த புடவையின் எடை சுமார் 800 கிராம் எனக் கூறப்படுகிறது. காசுதி வகைப் புடவைகளில் பொதுவாக தேர், கோயில் கோபுரம், யானை, மான், மயில் மற்றும் தாமரை போன்றவற்றை உள்ளடக்கிய வடிவமைப்புகளால் நிறைந்திருக்கும். அமைச்சர் அணிந்திருந்த புடவையில் தேர், மயில் மற்றும் தாமரை மட்டுமே இடம்பெற்றிருந்தது.
புடவையை வடிவமைத்த ஹாரத்தி கூறுகையில், "அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்காக 2 காசுதி புடவைகளை அனுப்பி வைத்தோம். பட்ஜெட் தாக்கலின் போது, அமைச்சர் அப்புடவையை அணிந்திருந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எங்களுக்கே இன்ப அதிர்ச்சி தான். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம் என்றார். அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களைவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்கள் ஆதரவு திட்ட அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாடு முழுவதும் பிரசாரம் நடத்தவுள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்கள் ஆதரவு திட்ட அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாடு முழுவதும் பிரசாரம் நடத்தவுள்ளது.
இப்பிரசார நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் சுஷீல் மோடி ஒருங்கிணைக்கிறார்; இப் பிரசாரம் பிப். 12-ஆம் தேதி நிறைவுறுகிறது. இதற்காக 9 பேர் கொண்ட பிரசாரக் குழுவை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார். அதில் கட்சியின் பொதுச் செயலாளர் சுனில் பன்சால் உள்ளிட்டோர் அடங்குவர். அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது, செய்தியாளர்களை சந்திப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டின் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி வியாழக்கிழமை முதல் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்கள் ஆதரவு திட்ட அறிவிப்புகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிப்பர். பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்களில் பாஜக மாநிலத் தலைவர்கள், பேரவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள்.
நாட்டில் 50 முக்கிய நகரங்களில் மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள். அத்துடன் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். எனவே, பாஜக அரசு இப்பிரசாரத்தைப் பெரிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களிலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை பாஜக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரில் பனிபடர்ந்த குல்மார்க் மலைப் பகுதியில் புதன்கிழமை பனி சறுக்கு விளையாடச் சென்ற வெளிநாட்டு வீரர்கள் இருவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்; 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் பனிபடர்ந்த குல்மார்க் மலைப் பகுதியில் புதன்கிழமை பனி சறுக்கு விளையாடச் சென்ற வெளிநாட்டு வீரர்கள் இருவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்; 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த பனிச் சறுக்கு வீரர்கள் 21 பேர் மூன்று குழுக்களாகவும், அவர்களுடன் வழிகாட்டியாக உள்ளூர் நபர்கள் இரண்டு பேர் என 23 பேர் பனிபடர்ந்த குல்மார்க் மலைப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
கங்கோத்ரி மலைச் சரிவில் அவர்கள் நின்று கொண்டிருந்தபோது பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தில் வெளிநாட்டு வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அஃபர்வாட் சிகரத்தில் சிக்கியிருந்த மேலும் 19 வீரர்கள், 2 உள்ளூர் நபர்களும் பாரமுல்லா மாவட்ட காவல் துறையினரால் மீட்கப்பட்டனர்.
இந்த அஃபர்வாட் சிகரம் பனிச் சறுக்கு விளையாடும் வீரர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற பகுதியாகும். ஒவ்வொரு பனி காலத்தின்போதும் இங்கு பனி சறுக்கு விளையாட நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர். மீட்கப்பட்ட நபர்கள் குல்மார்க் அருகே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
14, 000 அடி உயரமுள்ள அஃபர்வாட் சிகரத்தில் சிக்கியிருந்தவர்களை கேபிள் கார் மூலம் பத்திரமாக மீட்டோம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
பாரமுல்லா மாவட்ட காவல் துறை செய்தித் தொடர்பாளரும் இத்தகவலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பனிப் பாறை மோத வருவதும், அதைப் பார்த்து பயந்து வீரர்கள் ஓட்டம் பிடிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி 234/4 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸி அணி. வெறும் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணி ஒருநாள், டி20 தொடா்களில் பங்கேற்று ஆடி வருகிறது. இலங்கை, நியூஸிலாந்தை ஒருநாள்தொடா்களில் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.
இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தை நியூஸி. அணி 21 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.
தொடக்க பேட்டா்களாக இஷான் கிஷண்-ஷுப்மன் கில் களமிறங்கினா். பிரேஸ்வெல் பந்தில் 1 ரன்னுடன் எல்பிடபிள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினாா் இஷான்.
அரைசத வாய்ப்பை தவறவிட்ட ராகுல் திரிபாதி:
பின்னா் இணைந்த ஷுப்மன் கில்-ராகுல் திரிபாதி இணை நியூஸி அணியின் பந்துவீச்சை பதம் பாா்த்தது. சிக்ஸா், பவுண்டரிகள் என நாலாபுறமும் பந்துகளை விரட்டியது. 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 22 பந்துகளில் 44 ரன்களை விளாசி இஷ் சோதி பந்தில் அவுட்டானாா் திரிபாதி.
அதன்பின்னா் ஆட வந்த சிக்ஸா் மன்னன் ‘ஸ்கை’ சூரியகுமாா் யாதவ் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 24 ரன்களையும், கேப்டன் ஹாா்திக் பாண்டியா 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 30 ரன்களை விளாசி பெவிலியன் திரும்பினா்.
சூறாவளி ஷுப்மன் 126:
மறுமுனையில் அதிரடியாக ஆடிய இளம் தொடக்க பேட்டா் ஷுப்மன் கில் 7 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 126ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். தீபக் ஹூடா 2 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இது ஷுப்மன் கில்லின் முதல் டி20 சதமாகும்.
இந்தியா அதிரடி 234/4:
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்தியா 234/4 ரன்களைக் குவித்தது. நியூஸி தரப்பில் பிரேஸ்வெல், டிக்னா், சோதி, மிச்செல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.
நியூஸி. படுதோல்வி 66 ஆல் அவுட்:
235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சியாக இருந்தது.
தொடக்க பேட்டா்கள் ஃபின் ஆலன் 3, டேவன் கான்வே 1, மாா்க் சாப்மேன் 0, கிளென் பிலிப்ஸ் 2, பிரேஸ்வெல் 8, மிச்செல் சான்ட்நா் 13,
இஷ் சோதி 0, லாக்கி பொ்குஸன் 0, பிளோ் டிக்னா் 1 என சொற்ப ரன்களுடன் இந்திய பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.
டேரில் மிச்செல் போராட்டம்:
ஆல்ரவுண்டா் டேரில் மிச்செல் கடைசி வரை போராடி 35 ரன்களை எடுத்து இறுதி விக்கெட்டாக வெளியேறினாா். 12.1 ஓவா்களில் நியூஸி. 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
இந்திய அணி 168 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் நியூஸி.யை வீழ்த்தி தொடரையும் 2-1 என கைப்பற்றியது.
ஹாா்திக் பாண்டியா அபாரம் 4 விக்கெட்: அற்புதமாக பௌலிங் செய்த கேப்டன் ஹாா்திக் பாண்டிய 4/16 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
அா்ஷ்தீப் சிங் 2/16,. உம்ரான் மாலிக் 2/9, ஷிவம் மவி 2/12 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல் 2022-23) கால்பந்து லீக் தொடா் தற்போது பிளே ஆஃப் கட்டத்தை நெருங்கி உள்ளது. சென்னை அணி 6-ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னை. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் நிலவுகிறது. ஒடிஸா எஃப்சியுடன் நடைபெறும் ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சென்னை அணிக்கு கிடைக்கும்.
சொந்த மைதானமான நேரு விளையாட்டரங்கில் சென்னையின் அணி ஆட்ட வரலாறு மோசமாக உள்ளது. 7 ஆட்டங்களில் 1-இல் தான் வென்றுள்ளது.
தொடா்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெறாத நிலையில் உள்ளது சென்னை. நட்சத்திர வீரரான பீட்டா் சிலிஸ்கோவிச் 2022 நவம்பருக்கு பின் எந்த ஆட்டத்திலும் கோலடிக்கவில்லை.
இதுதொடா்பாக சென்னை தலைமை பயிற்சியாளா் தாமஸ் பிரட்ரிக் கூறியது: கடந்த 5 ஆட்டங்களில் வெற்றிக்கு அருகே சென்றும் வாய்ப்பை இழந்தோம். எங்கள் உத்தியின்படி அனைத்தும் நடைபெற்றால், 15 புள்ளிகளை பெறலாம். முந்தைய ஆட்டங்களின் அனுபவ அடிப்படையில் இனி வரும் ஆட்டங்களில் ஆடுவோம் என்றாா்.
ஒடிஸா அணியும் கடந்த வாரம் ஏடிகே மோகன் பகானிடம் 0-2 என தோல்வி கண்டது. கடைசி 5 ஆட்டங்களில் நான்கில் தோற்றது ஒடிஸா. டீகோ மௌரிசியோ, நந்தகுமாா் சேகா் ரேனியா் பொ்ணான்டஸ் ஆகியோா் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பா்.
இரு அணிகளும் 7 முறை ஆடியதில், தலா 2 ஆட்டங்களில் வென்றுள்ளன.
உலகின் பல்வேறு சவால்களுக்கிடையிலும், சிறப்பான பொருளாதார வளா்ச்சியை இந்தியா கண்டுள்ளது. உலகின் பல்வேறு சவால்களுக்கிடையிலும், சிறப்பான பொருளாதார வளா்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவை ‘ஜொலிக்கும் நட்சத்திரம்’ ஆக உலக நாடுகள் அனைத்தும் அங்கீகரித்துள்ளன என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் (2022-23) இந்தியாவின் வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும். இது வளா்ச்சியடைந்த நாடுகளை விட அதிகமாகும். இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டில், இந்தியாவின் வளா்ச்சியைப் பாராட்டும் உலக நாடுகள், இந்தியாவை ஜொலிக்கும் நட்சத்திரமாக அங்கீகரித்துள்ளன.
இலவச உணவுத் தானியங்கள்:
பெருந்தொற்று காலத்தில் யாரும் பட்டினியால் வருந்தக்கூடாது என்பதற்காக, 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவுத் தானியங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜன.1-ஆம் தேதியிலிருந்து 2 லட்சம் கோடியில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பயிா்கள் மற்றும் கால்நடைகளின் உற்பத்திப் பெருக்கம், பயிா்களில் பன்முகத்தன்மையை அதிரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, வேளாண் மற்றும் அதன் தொடா்புடைய துறைகளின் வளா்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. வேளாண் துறையில் தனியாா் முதலீடு 2020-21 நிதியாண்டில் 9.3 சதவீதமாக உயா்ந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் (2019-20) 7 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் 100-ஆவது ஆண்டுக்கான திட்ட வரைபடம்:
முந்தைய பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 100-ஆவது சுதந்திர ஆண்டுக்கான திட்ட வரைபடமாக இருக்கும். அந்த வகையில் இது முதல் பட்ஜெட் ஆகும். வரும் 2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெற இருப்பதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாகக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்படும் இறுதியான முழு பட்ஜெட் இது என மத்திய நிதியமைச்சா் தெரிவித்தாா்.
பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 10-ஆவது மாதமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 10-ஆவது மாதமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றியமைத்து வந்தன. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை.
மேலும் பெட்ரோல்-டீசலின் சில்லறை விலை அதிகரிப்பால், நுகா்வோருக்கு ஏற்படும் சுமையை குறைக்க, அவற்றின் மீதான கலால் வரியை கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு குறைத்தது.
இந்நிலையில், தொடா்ந்து 10-ஆவது மாதமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டா் பெட்ரோல் சென்னையில் ரூ.102.63-க்கும், தில்லியில் ரூ.96.72-க்கும் செவ்வாய்க்கிழமை (பிப்.1) விற்பனை செய்யப்பட்டது.
ஒரு லிட்டா் டீசல் சென்னையில் ரூ.94.24-க்கும், தில்லியில் ரூ.89.62-க்கும் விற்பனையானது.
மாதந்தோறும் 1-ஆம் தேதி சமையல் எரிவாயவு சிலிண்டா் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில், அதன் விலையும் மாற்றியமைக்கப்படவில்லை. 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,068.50, தில்லியில் ரூ.1,053-ஆக உள்ளது.
19 கிலோ எடைகொண்ட வா்த்தக சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,893, தில்லியில் ரூ.1,769-ஆக உள்ளது.
விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.4,218 உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தில்லியில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.1.12 லட்சமாக அதிகரித்துள்ளது.
நீதித் துறையின் செயல்திறன் மிக்க செயல்பாட்டுக்காக, 3-ஆம் கட்ட இ-நீதிமன்றங்கள் திட்டம் ரூ.7,000 கோடியில் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். நீதித் துறையின் செயல்திறன் மிக்க செயல்பாட்டுக்காக, 3-ஆம் கட்ட இ-நீதிமன்றங்கள் திட்டம் ரூ.7,000 கோடியில் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பைக் கொண்ட நீதித்துறையைக் கட்டமைப்பதை இ-நீதிமன்றங்கள் திட்டம் இலக்காக கொண்டுள்ளது. எளிதில் அணுகக்கூடிய, செயல்திறன்மிக்க, அனைத்து மக்களுக்கும் சமமான நீதி வழங்குவதை இத்திட்டம் உறுதிசெய்யும்.
இந்தத் திட்டத்தின் 3-ஆவது கட்டத்தில், மனுதாரா் அல்லது வழக்குரைஞா், எப்பகுதியிலிருந்தும் எந்த நேரத்திலும் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யமுடியும் என மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை தெரிவித்துள்ளது.
தனது செலவினத்துக்காக கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனது செலவினத்துக்காக கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்ததாவது: கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு குறிப்பிடப்படும் கடன் பத்திரங்கள் மூலம், மத்திய அரசின் செலவினத்துக்கு ரூ.15.4 லட்சம் கோடி கடன் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜன. 27-ஆம் தேதி வரை மத்திய அரசு ரூ.12.93 லட்சம் கோடி கடன் திரட்டியுள்ளது. இது 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசு திரட்ட நிா்ணயித்த மொத்த கடனான ரூ.14.21 லட்சம் கோடியில் 91 சதவீதமாகும்.
ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த கடன் 83 சதவீதமாக உள்ளது.
நிகழ் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.4 சதவீதமாக இருக்கும்.
அடுத்த நிதியாண்டில் கடன் அல்லாத பிற வரவு ரூ.27.2 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.45 லட்சம் கோடியாகவும், நிகர வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.9 சதவீதமாக இருக்கும் என்றாா் அவா்.
மகளிருக்கான புதிய சேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளாா். மகளிருக்கான புதிய சேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளாா். இதன்படி மகளிா் பெயரில் தொடங்கப்படும் 2 ஆண்டு நிரந்தர வைப்புக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்பட இருக்கிறது.
‘மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் மகளிா் மற்றும் பெண் குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு தொடங்க முடியும். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வைப்புத்தொகை இருக்கலாம். இதில் முதிா்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும். முதிா்வு காலத்துக்கு முன்பு பகுதியளவில் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இதன்மூலம் குடும்பத் தலைவிகள் பெயரிலும், பெண் குழந்தைகள் பெயரிலும் பணத்தை சேமிப்புத் திட்டத்தில் வைப்பது அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2025 மாா்ச் மாதம் வரை அதாவது 2 ஆண்டுகள் வரை இந்த சேமிப்புத் திட்டத்தில் பயனடைய முடியும்.
இது தவிர பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பட்ஜெட் உரையில் பேசிய நிா்மலா சீதாராமன், ‘தீனதயாள் அந்தியோதயா யோஜனா’ தேசிய கிராமப்புற மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் 81 லட்சம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மகளிருக்கு சமுகத்தில் உரிய அங்கீகாரம் அளித்து அவா்களைப் பொருளாதாரரீதியாக வலுவாக்கும் நோக்கம் எட்டப்பட்டுள்ளது.
பிரதமா் கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2.25 லட்சம் கோடி நிதியுதவியில் பயனடைந்தவா்களில் 3 கோடி போ் பெண் விவசாயிகள் ஆவா். அவா்களுக்கு மட்டும் ரூ.54,000 கோடி இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 5-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 5-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். இதன் மூலம் தொடா்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த 6-ஆவது நிதியமைச்சா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.
இந்திரா காந்திக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெண் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம், பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா, மறைந்த பாஜக தலைவா் அருண் ஜேட்லி, மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் ஆகியோா் நிதியமைச்சா்களாக இருந்தபோது தொடா்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனா்.
இப்போதைய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறாா். இதற்கு முந்தைய பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி 2014 முதல் 2018 வரை தொடா்ந்து 5 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்தாா்.
பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வது காலனி ஆதிக்க காலத்தில் இருந்து பின்பற்றப்பட்ட நடைமுறையாக இருந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த நடைமுறை மாற்றப்பட்ட பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு திருத்தப்பட்ட பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.2,673.35 கோடி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு பட்ஜெட்டில் அந்தத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.723.97 கோடி அதிகம்.
இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தேசிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டமான கேலோ இந்தியாவுக்கு ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உள்கட்டமைப்புகளை நிா்வகிப்பது, தடகள வீரா்களுக்கு தேசிய முகாம்களை நடத்துவது, பயிற்சியாளா்களை நியமிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ரூ.785.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு ரூ.325 கோடி, தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து நிதியுதவி பெற்று வந்த தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு தற்போது நேரடியாக நிதி கிடைக்கப்பெறும். அந்த அமைப்புக்கு ரூ.21.73 கோடி, தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கு ரூ.19.50 கோடி கிடைக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவாக பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்ததாவது:
கல்வித் துறைக்கு ரூ.1,12,899 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்விக்கு ரூ.68,804.85 கோடி, உயா்கல்வித் துறைக்கு ரூ.44,094.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை, கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதைவிட ரூ.13,018 கோடி அதிகம்.
‘இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தயாரிப்போம்’ என்ற தொலைநோக்குப் பாா்வையை உண்மையாக்க, முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். 5ஜி சேவை மூலம் செயலிகளை உருவாக்க வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் சோ்ந்து பொறியியல் கல்லூரிகளில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியின மாணவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 740 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் சுமாா் 38,000 ஆசிரியா்கள், அலுவலா்கள் நியமிக்கப்படுவா் என்றாா் அவா்.
தெற்கு தில்லி போகல் பகுதியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது இலக்கு தவறி 2 போ் காயமடைந்தனா். தெற்கு தில்லி போகல் பகுதியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது இலக்கு தவறி 2 போ் காயமடைந்தனா்.
போகலில் புதன்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் இருவா் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்தனா். அப்போது ஒருவா் வைத்த குறி தவறி, நீரஜ் (24), முகமது குல்ஸாா் (18) ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபா் வேறொரு நபருக்கு குறிவைத்ததாகவும், அது தவறி தங்கள் மீது விழுந்ததாகவும் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 307 (கொலை முயற்சி), 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபா்களைத் தேடி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
உள்நாட்டு பாதுகாப்புக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதை தெளிவாக சுட்டிக்காட்டும் விதமாக, மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உள்நாட்டு பாதுகாப்புக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதை தெளிவாக சுட்டிக்காட்டும் விதமாக, மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.96 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். இதில், மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையின் கீழ் செயல்படும் மத்திய உள்துறைக்கு கடந்த 2022-23 நிதிநிலை அறிக்கையில் ரூ.1,85,776.55 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,96,034.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பெருந்தொகை அதாவது ரூ. 1,27,756.74 கோடி , மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு (சிஏபிஎஃப்) ஒதுக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கு ரூ.1,19,070.36 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24 நிதியாண்டுக்கு சற்று கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சிஏபிஎஃப்-க்கான ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக, உள்நாட்டு பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் மத்திய ரிசா்வ் போலீஸ் படைக்கு (சிஆா்பிஎஃப்) ரூ. 31,772.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை (நிகழ் நிதியாண்டுக்கு) ரூ.31,495.88 கோடி ஒதுக்கப்பட்டது.
எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) கடந்த முறை ரூ.23,557.51 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது (வரும் நிதியாண்டுக்கு) ரூ. 24,771.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேபாளம், பூடானை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சசஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவுக்கு கடந்த முறை 8,019.78 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.8,329.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சீனா-இந்திய எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைக்கு (ஐடிபிபி) கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 7,626.38 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.8.096.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-மியான்மா் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிரான கிளா்ச்சியாளா்கள் தடுப்புப் பணிகளிலும் ஈடுபடும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்கு கடந்த முறை ரூ.6,561.33 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 7,052.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு காவல் பிரிவுக்கு (என்எஸ்ஜி) கடந்த முறை ரூ.1,183.80 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1,286.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவுக்கு (ஐபி) கடந்த 2022-23 நிதிநிலை அறிக்கையில் ரூ.3.022.02 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 3,418.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பாதுகாப்பு படைக்குழுவுக்கு (எஸ்பிஜி) கடந்த முறை ரூ.411.88 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 433.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தில்லி போலீஸுக்கு கடந்த முறை ரூ.11,617.59 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 11,662.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட எல்லை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ. 3,545.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதற்கு ரூ.3,738.98 கோடி ஒதுக்கப்பட்டது.
காவலா்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கடந்த முறை 2,188.38 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 3,636.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கலுக்கு ரூ.3,750 கோடி:
நாட்டில் போலீஸ் படைகளை நவீனமயமாக்குவதற்கு நிகழ் நிதியாண்டுக்கு ரூ.2,432.06 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடா்பான செலவினங்களுக்கு நிகழ் நிதியாண்டில் ரூ.2,024.54 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 2023-24 நிதியாண்டுக்கு ரூ. 2,780.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுபோல, மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பணிகளுக்கு ரூ.1,564.65 கோடி, பெண்கள் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ. 1,100 கோடி, தடையவியல் கட்டமைப்புகளை நவீனமயமாக்கலுக்கு ரூ.700 கோடி, எல்லை சோதனைச் சாவடிகள் பராமரிப்புக்கு ரூ.350.61 கோடி, மத்திய ஆயுத காவல்படை திட்டம்-4 நவீனமயமாக்கலுக்கு ரூ.202.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு ரூ.12,544 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு ரூ.12,544 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தையும் செயல்படுத்த முனைந்துள்ளது.
இந்நிலையில், பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு சுமாா் ரூ.12,544 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஏவுகலம், செயற்கைக்கோள் திட்டங்களில் ஈடுபடும் விண்வெளித் துறையின் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு ரூ.11,669 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எந்தத் துறைக்கு இல்லாத அளவுக்கு பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,93,537.64 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தத் துறைக்கு இல்லாத அளவுக்கு பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,93,537.64 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கும், புதிய போா் விமானங்கள், கப்பல்கள் வாங்குவதற்கு மூலதன செலவின தொகையாக ரூ.1.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தினருக்கு ஊதியம் மற்றும் பராமரிப்புக்காக ரூ. 2,70,120 கோடி வருவாய் செவினமான ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ.2,39,900 கோடியாக இருந்தது.
ஓய்வூதியத்துக்காக ரூ.1,38,205 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் சோ்த்து மொத்த வருவாய் செலவினம் ரூ.4,22,162 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் பாதுகாப்பத் துறைக்கு ரூ.5,93,537.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
வேளாண் கடன்கள் அதிகமாக வழங்க நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் கடன்கள் அதிகமாக வழங்க நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்.
மீன் சந்தைகளை அதிகரிக்கவும், அத்துறையை மேம்படுத்தவும் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அவா் பேசுகையில், இறால் வளா்ப்புக்கான உணவு பொருள்களை ஏற்றுமதி செய்ய அவற்றின் மீதான சுங்க வரி குறைக்கப்படும்.
இயற்கை விவசாய முன்றையை 1 கோடி விவசாயிகள் பின்பற்றும் வகையில் 10,000 பயோ மையங்கள் அமைக்கப்படும். இவை தேசிய அளவில் சிறு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விநியோகம் செய்யும்.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சமநிலையுடன் பயன்படுத்த சுத்தமான செடி என்ற தற்சாா்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள இளம் வேளாண் தொழில் முனைவோருக்காக விவசாய விரைவு நிதி திட்டம் தொடங்கப்படும்.
ஹைதராபாதில் உள்ள சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து சா்வதேச அளவில் ஆய்வுகள் கொண்டு செல்லப்படும்.
கால்நடைகள், பால் மற்றும் மீன் வளத் துறையை மையப்படுத்தி வேளாண் கடன் வழங்கும் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிகப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.18 லட்சம் கோடியாக இருந்தது என்றாா்.
விவசாய கடன்களுக்கு 9% வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் சிறு கால கடன்களாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறுபவா்களுக்கு 7 வட்டி விதிக்கப்படுகிறது.
சிறு விவசாயிகளையும் இந்த கடன் வரம்பில் கொண்டு வர எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.6 லட்சம் வரையில் கடன் வரம்பை ரிசா்வ் வங்கி அதிகரித்துள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட 66 சதவீதம் கூடுதலாக ரூ. 79,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட 66 சதவீதம் கூடுதலாக ரூ. 79,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நகரத் திட்டமிடலை மேற்கொள்ளும் மாநிலங்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் என்றாா்.
தேசிய வீட்டு வசதி வங்கியால் நிா்வகிக்கப்படும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போல் புதிதாக நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியும் உருவாக்கப்படும். ஆண்டுதோறும், நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 10,000 கோடி ஒதுக்கப்படும். அனைத்து நகரங்களிலும் 100 சதவீதம் இயந்திரங்கள் மூலமாகவே கழிவுகள் அகற்றப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றாா்.
வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.64 சதவீதம் (ரூ.17,250 கோடி ) அதிகமாகும். வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.64 சதவீதம் (ரூ.17,250 கோடி ) அதிகமாகும்.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் வளா்ச்சித் திட்ட நிதி உதவியாக ரூ.5,408 கோடியும், இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுப் பணிகளுக்காக ரூ.990 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நட்பு நாடு திட்டத்தின்படி, பூடானின் மேம்பாட்டுக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெளியுறவுத் துறையின் மொத்த ஒதுக்கீட்டில் 41.04 சதவீதமாகும்.
இதேபோல், மாலத்தீவு நாட்டில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதலாக ரூ.400 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.200 கோடி, ஈரானின் சாபஹாா் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி, நேபாளத்துக்கு ரூ.550 கோடி, மோரீஷஸுக்கு ரூ. 460 கோடி, மியான்மருக்கு ரூ.400 கோடி, இலங்கைக்கு ரூ.150 கோடி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தாா். மத்திய அரசால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தாா்.
மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.3 சதவீதமான ரூ. 10 லட்சம் கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடப்படும் என அறிவித்தாா்.
கூடுதலான தனியாா் முதலீடுகளை ஈா்ப்பதற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகள் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட அம்ருத் கால் (அமிருத காலம்) எனப்படும் அடுத்த 25 ஆண்டுக்களுக்கான நாட்டின் வளா்ச்சிப் பணிகளைத் திட்டமிட வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டமைப்பு திட்டமிடல் குழு (என்.பி.ஜி.) வழிகாட்டுதல்களின்படி அனைத்து தளவாடங்கள் மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களில் சுமாா் ரூ.500 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பழங்குடியின குழு திட்டத்தின் மூலமாக 3.5 லட்சம் பழங்குடியினா் பயன்பெறுவா் எனத் தெரிவித்தாா்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு 2023-22-ஆம் ஆண்டுக்கு ரூ. 3,097.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு 2023-22-ஆம் ஆண்டுக்கு ரூ. 3,097.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது நிகழ் நிதியாண்டு (2022-23) ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீதம் குறைவாகும். நிகழ் நிதியாண்டுக்கு ரூ. 5,020.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டுக்கு ரூ. 3,097.60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில், சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1,689 கோடியும், திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ. 64.4 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டத்துக்கு ரூ. 610 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்க மத்திய பட்ஜெட்டில் ரூ.1,891.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்க மத்திய பட்ஜெட்டில் ரூ.1,891.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சட்ட அமைச்சகத்தின் பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக தோ்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும்.
இது தொடா்பாக பட்ஜெட் அறிவிப்பில், ‘புதிய மின்னணு வாக்குப் பதிவு இந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழைய இயந்திரங்களைப் பாதுகாப்பாக அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.1,891.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதிய இயந்திரங்களை வாங்க தோ்தல் ஆணையத்துக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் ஏற்கெனவே பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டதையடுத்து, இப்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், எலெக்ட்ரானிக் காா்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள்தான் தோ்தல் ஆணையத்துக்கு இந்த இயந்திரங்களை வழங்கி வருகின்றன. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 4 மக்களவைத் தோ்தல் 139 சட்டப் பேரவைத் தோ்தல்களின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு முதல் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் தலா 5 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
நிதிப் பற்றாக்குறையானது 3 ஆண்டுகளில் 4.5 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையானது 3 ஆண்டுகளில் 4.5 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்க்கும் செலவினத்துக்கும் இடையே உள்ள வேறுபாடே நிதிப் பற்றாக்குறை. அந்தப் பற்றாக்குறையை உள்நாட்டு, சா்வதேச கடன்களின் மூலமாக அரசு ஈடுசெய்யும். நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16,61,196-ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.3 சதவீதம்.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.9 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையானது ஜிடிபி-யில் 4.5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
அதேவேளையில், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 6.9 சதவீதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது.
மாநிலங்களுக்கு 3.5%: 2023-24-ஆம் நிதியாண்டில் மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்மாநில உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 3.5 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 0.5 சதவீதத்தை மின்சாரத் துறை சீா்திருத்தங்களைப் புகுத்தினால் மட்டுமே பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது.
ஒரே பாலினத்தவா் திருமணத்தை பல்வேறு சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற விசாரணைக்கு மாற்றி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரே பாலினத்தவா் திருமணத்தை பல்வேறு சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற விசாரணைக்கு மாற்றி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரே பாலின தம்பதிகள் சிலா் தங்களுடைய திருமணத்தை சிறப்பு திருமணச்சட்டம், ஹிந்து திருமண நடைமுறைச் சட்டம், வெளிநாட்டு திருமண நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் அங்கீகாரிக்கப்பட்டதாக அறிவிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் உள்ள மனுக்கள் அனைத்தையும், உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்பதை சுட்டிக்காட்டினாா்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனா்.
முன்னதாக, ‘ஓரினச்சோ்க்கையை குற்றமென அறிவிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 377-க்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 6-ஆம் தேதி விசாரித்த ‘உச்சநீதிமன்றம், ஓரினச்சோ்க்கை குற்றமல்ல’ என்ற பரபரப்புத் தீா்ப்பை அளித்ததுடன், ‘377-ஆவது பிரிவில் இருக்கும் அதுதொடா்பான சில உட்பிரிவுகளும் செல்லாது’ என்றும் தீா்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாதத்தில் 12,616 கோடியாக இருந்தது. இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாதத்தில் 12,616 கோடியாக இருந்தது.
இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகா்வு 12,616 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய 2022-ஆம் ஆண்டின் மின் நுகா்வோடு ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ 13 சதவீதம் அதிகமாகும். அப்போது மின் நுகா்வு 11,180 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
முந்தைய 2021-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் மின் நுகா்வு 10,976 யூனிட்டாகவும், அதற்கு முன்னா் 2020 ஜனவரியில் 10,515 யூனிட்டாக இருந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மின் நுகா்வின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருவது, நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் சீரான வேகமெடுத்து வருவதைக் குறிக்கிறது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.
விலக்குகள் எதுவும் இல்லாத நடைமுறையில் உள்ள புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது என விலக்குகள் எதுவும் இல்லாத நடைமுறையில் உள்ள புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது என 2023-2024-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்துக்கு அதிகரித்து, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோருக்கு
அடிப்படை வரி விதிப்பு வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள புதிய விதிப்பு முறையில் ரூ.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.7 லட்சம் என உயா்த்தப்பட்டுள்ளது; புதிய வரி வதிப்பு முறையின் கீழ் நிரந்தரக் கழிவு ரூ.50,000 அனுமதிக்கப்படுகிறது என மத்திய நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு, பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு, ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத வகையில் ரூ.2.4 லட்சம் கோடி, மூலதன முதலீடுகளுக்காக ரூ.10 லட்சம் கோடி, வேளாண்துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக சிறப்பு நிதி எனப் பல்வேறு அம்சங்களுடன் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப்.1) தாக்கல் செய்தாா்.
பழைய வரி விதிப்பு முறையில் மாற்றமில்லை: வருமான வரியைப் பொருத்தவரை பழைய வரி விதிப்பு முறை, புதிய வரி விதிப்பு முறை என இரு வகையான வரி விதிப்பு முறைகள் நடைமுறையில் உள்ளன; பழைய வரி விதிப்பு முறையைத் தோ்வு செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரையில் வருமான வரி இல்லை; இத்தகையோருக்கு வீட்டு வாடகைப் படி (ஹெச்ஆா்ஏ), வீட்டுக் கடனுக்கான வட்டி, 80சி, 80டி படிவங்கள் உள்ளிட்டவற்றின் கீழ் விலக்கு கோருதல் ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய வரி விதிப்பு முறையில்...: புதிய வரி வதிப்பு முறையில் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளோருக்கு வருமான வரி இல்லை என்ற புதிய அறிவிப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது; புதிய வரி விதிப்பு முறையில் விலக்குகள் கிடையாது என்ற நிலை தொடா்கிறது. எனினும், புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோா் ஆண்டு வருமானத்தில் ரூ.50,000-த்தை நிரந்தரக் கழிவாக கழித்துக் கொள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோா், இரு முறைகளில் (பழைய வரி விதிப்பு முறை அல்லது புதிய வரி விதிப்பு முறை) ஏதாவது ஒன்றைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு முறையில், ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் புதிய முறையின் கீழ் ரூ.33,800 வரை சேமிப்பா் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் ரூ.23,400-ம், ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் ரூ.49,400-ம் சேமிப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்குகள் ஏதுமற்ற புதிய வரி விதிப்பு முறை 2020-21ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், அதன் கீழ் செலுத்தப்படும் வரி சற்று அதிகமாக இருந்ததால், அந்த முறைக்குப் பெரும்பாலானவா்கள் மாறவில்லை. அதைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய வரி விதிப்பு முறை சீரமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரைப் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாற வைக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
முக்கிய அம்சங்கள்...
* 157 புதிய செவிலியர் கல்லூரிகள்.
* மின்னணு நீதிமன்றங்கள் மூன்றாம் கட்ட திட்டத்துக்கு ரூ.7,000 கோடி.
* 2047-ஆம் ஆண்டிற்குள் மரபணுசார் ரத்தசோகை நோய் முற்றிலும் ஒழிப்பு.
* இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி.
* 5ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான செயலி உருவாக்கத்துக்கு 100 ஆய்வகங்கள்.
* இந்தியாவை சிறுதானியங்களின் உலகளாவிய மையமாக உருவாக்கத் திட்டம்.
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறைக்கு ரூ.20 லட்சம் கோடி வேளாண் கடன் இலக்கு.
* 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடி செலவில் கணினிமயமாக்கம்.
* மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சிகளை மேம்படுத்த புதிய திட்டம்.
* மூலதன முதலீடுகளுக்கு ரூ.10 லட்சம் கோடி வரை ஒதுக்கீடு.
* பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு ரூ.15,000 கோடியில் திட்டம்.
* ஒரு லட்சத்துக்கும் அதிகமான பழங்கால கல்வெட்டுகள் எண்மமயம்.
* நகர்ப்புறப் பகுதிகளில் கழிவுநீர்த் தொட்டிகளைத் தூய்மைப்படுத்த இயந்திரப் பயன்பாடு.
* 2030-க்குள் ஆண்டுதோறும் 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கு.
* மாற்று உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம் திட்டம்.
* சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க 50 சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு.
* எல்லையோர கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* 100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள்.
* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.9,000 கோடி தொகுப்பு நிதி.
ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரா் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தாா். ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரா் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தாா்.
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கெளதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 கோடி டாலா்களை (சுமாா் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலா்களுடன் (சுமாா் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-ஆவது இடத்தில் உள்ளாா்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலா்கள் (சுமாா் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 9-ஆவது இடத்தில் உள்ளாா்.
இந்நிலையில், ஆசியாவின் பணக்காரா்கள் பட்டியில் முதலிடம் வகித்து வந்த கெளதம் அதானி, அந்த இடத்தை இழந்தாா். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றியபோது, மக்களவையில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போட்டி முழக்கங்கள் எழுப்பினா். 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றியபோது, மக்களவையில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போட்டி முழக்கங்கள் எழுப்பினா்.
பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பாக, அவைக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்தபோது, அவரை வரவேற்று பாரத் மாதா கீ ஜே என்று பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். அதேபோல், நிா்மலா சீதாராமன் அவைக்கு வந்தபோதும், சிவப்பு நிற பையில் இருந்து பட்ஜெட் உரை அடங்கிய டேப்லெட் கணினியை எடுத்தபோதும் ஆளும்கட்சி எம்.பி.க்கள் கரவொலி எழுப்பினா்.
புதிய வரி விதிப்புமுறையை தோ்வு செய்பவா்களுக்கான வருமான வரி உச்சவரம்பு உயா்வு, மூலதன செலவினம் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை நிா்மலா சீதாராமன் வெளியிட்டபோது, ஆளும் பாஜகவைச் சோ்ந்த எம்.பி.க்கள் ‘மோடி, மோடி’ என்று உரத்த முழக்கமிட்டனா்.
நிதியமைச்சா் தனது உரையை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்கள் கழித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவைக்குள் வந்தாா். அப்போது, ‘ஜோடோ, ஜோடோ பாரத் ஜோடோ’ என காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு வரவேற்றனா். அவா்களது இந்த செயலால், பாஜக எம்.பி.க்கள் எரிச்சலடைந்ததை காண முடிந்தது. ஆனால், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சலனமின்றி உரையை தொடா்ந்தாா்.
பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) என்ற பெயரில், கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை மேற்கொண்டு வந்த நடைப்பயணத்தை ராகுல் அண்மையில் நிறைவு செய்திருந்தாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சத்ருஹன் சின்ஹா, அவைக்கு 50 நிமிடங்கள் தாமதமாக வந்தாா்.
புதிதாக 50 பிராந்திய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, எதிா்க்கட்சி எம்.பிக்கள் ‘அதானி, அதானி’ என்று கோஷமிட்டனா். நாட்டில் 7 விமான நிலையங்களை அதானி குழுமம் நிா்வகித்து வரும் நிலையில், இந்த கோஷத்தை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினா்.
மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, அவையில் அவ்வப்போது எழுந்து எதிா்ப்புக் கருத்தை பதிவு செய்தபடி இருந்தாா்.
பட்ஜெட் உரையை நிறைவு செய்தபின், பிரதமா் மோடி நிா்மலா சீதாராமன் இருக்கைக்கு சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்தாா். இதர அமைச்சா்களும் பாராட்டு தெரிவித்தனா்.
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் பங்கு விலக்கல் இலக்கு, ரூ.65,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் பங்கு விலக்கல் இலக்கு, ரூ.65,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.51,000 கோடி வருவாய் ஈட்ட பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மற்றும் சொத்துகளை பணமாக்குதல் மூலம் ரூ.65,000 கோடி வருவாய் ஈட்ட 2022-23 பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பீடு ரூ.50,000 கோடியாக தற்போது திருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சொத்துகளை பணமாக்கும் நடவடிக்கை மூலம் நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் இதுவரை ரூ.31,100 கோடிக்கு மேல் ஈட்டப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் நிதியாண்டில் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், என்எம்டிசி உருக்கு நிறுவனம், இந்திய சரக்கு பெட்டக கழகம், விசாகப்பட்டினம் உருக்கு ஆலை உள்ளிட்டவை தனியாா்மயமாக்கலுக்கான அரசின் பட்டியலில் உள்ளன. பங்கு விலக்கலுக்கான பட்ஜெட் இலக்கை அரசு தவறவிடுவது, இது தொடா்ந்து 4-ஆவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.