பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட விரியன்கோவில் பீட் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி விழுந்ததில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது
மின் தடையை கண்டித்து மடிப்பாக்கத்தில் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்டது மடிப்பாக்கம். இங்கு கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் வசதியாக இருப்பதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. டிக்கெட் கவுன்ட்டர்களில் நெரிசலை தவிர்க்க இணையதளம் வசதியுடன், மொபைல்போன் செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க, 9 மாதம் முதல் ஓராண்டுக்குள் எதிர்மனுக்களை தாக்கல் செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்
மர்மமான முறையில் உயிரிழந்ததிருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனபதிவு எண் பலகை (நம்பர் பிளேட்) வைத்திருந்ததாக 5 நாட்களில் 1,200 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சியை தொடர்கிறேன் என்று திமுக ஆட்சியின் 4-ம் ஆண்டு தொடக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு வாக்களிப்பதற்காக வந்த முஸ்லிம்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியதாக வெளியாகும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதிய வன்கொடுமைக்கு உள்ளாகி தாக்கப்பட்ட நாங்குநேரி பள்ளி மாணவன் பிளஸ் 2 தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற நிலையில், அவரை நேரில் அழைத்து இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டினார்.
Savukku Shankar : கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சவுக்கு சங்கர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருக்கு இதுவரை எக்ஸ்ரே எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த தமிழக அரசுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜேக் பிரேசர் மெக்குர்க் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 50 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். அவரின் அதிரடியில் டெல்லி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஆந்திராவில் வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக அன்புமணி ராமதாஸை பிரச்சாரம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.
பெண் போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது, சேலம் சைபர் கிரைம் போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நடந்து வரும் இந்த சமயத்தில் இந்த தேர்தல் சிறப்பாக இருப்பதாகவும் இந்தியா நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பிரபல செய்தி ஊடகம் செய்தி பதிவிட்டதாக ஒரு பதிவு வைரலாகிறது. இது உண்மையா ?
அரியலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு லண்டனில் வேலை கிடைத்ததை தனது நண்பர்களிடம் மகிழ்ச்சியாக போனில் கூறிக் கொண்டிருந்த போது, அரளி பூவை தெரியாமல் வாயில் போட்டு மென்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 23 இன நாய்களில் இந்த ராட்வீலர் நாய் ரகமும்ஒன்று. நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், இந்ததடைக்கு பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இடைக்கால தடைதற்போது விதிக்கப்பட்டுள்ளது.