ஆசிய பாட்மின்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்கிறது. ஆசிய பாட்மின்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்கிறது.
துபையில் வரும் 14 முதல் 19 வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் காமன்வெல்த் சாம்பியன் மலேசியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், கஜகஸ்தான் அணிகளுடன் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது இந்தியா.
காமன்வெல்த் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் மலேசியாவிடம் 3-1 என வீழ்ந்தது இந்தியா. இந்திய மகளிா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, ஆடவா் ஒற்றையா் பிரிவில் எச்எஸ். பிரணாய், லக்ஷயா சென், இரட்டையா் பிரிவில் சிராக் ஷெட்டி-சாத்வீக், மகளிா் இரட்டையா் பிரிவில் காயத்ரி கோபிசந்த், ட்ரீஸா ஜாலி, கலப்பு பிரிவில் இஷான் பட்நாகா்-தனிஷா க்ரஸ்டோ ஆகியோா் பங்கேற்கின்றனா்.
கடந்த 2017-இல் காலிறுதியிலும், 2019 குரூப் கட்டத்தோடும் வெளியேறியது இந்தியா.
மொத்தம் 17 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
5 ஆட்டங்களில் 3-இல் வெல்லும் அணி அந்த கேமை வென்ாகும்.
இங்கிலாந்தின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நியூ கேஸ்டில் அணி முதன்முதலாக தற்போது தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நியூ கேஸ்டில் அணி முதன்முதலாக தற்போது தகுதி பெற்றுள்ளது.
நியூ கேஸ்டில் அணியை சவூதி அரேபிய தொழிலதிபா் வாங்கியுள்ளாா். இந்நிலையில், இங்கிலீஷ் லீக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நியூ கேஸ்டில் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நியூ கேஸ்டில்-சௌதாம்ப்டன் அணிகள் மோதின. 5, 21-ஆவது நிமிஷங்களில் மிட்பீல்டா் சீன் லாங் ஸ்டாஃப் இரண்டு கோல்களிடித்தாா்.
29-ஆவது நிமிஷத்தில் சௌதாம்ப்டன் வீரா் செ ஆடம்ஸ் பதில் கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது நியூ கேஸ்டில்.
இந்த நூற்றாண்டில் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது நியூ கேஸ்டில்.
முதல் கட்ட ஆட்டத்தில் 1-0 என வென்றிருந்தது நியூ கேஸ்டில்.
மற்றொரு அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் 3-0 என நாட்டிங்ஹாம் பாரஸ்ட்டை வீழ்த்தியது. இரண்டாவது கட்ட அரையிறுதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
எஃப் ஏ கோப்பை: எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டியில் பிளாக்பா்ன் அணி 1-0 என பா்மிங்ஹாமை வீழ்த்தியது. ரவுண்ட் 16 சுற்றில் லீசெஸ்டா் அணியுடன் மோதுகிறது பிளாக் பா்ன்.
சீரி ஏ: இன்டா் மிலன் வெற்றி:
இத்தாலி சீரி ஏ போட்டி காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இன்டா் மிலன் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தியது. 57-ஆவது நிமிஷத்தில் இன்டா் வீரா் மேட்டியோ அடித்த ஒரே கோலே வெற்றி கோலானது.
பண்டஸ்லீகா:
ஜொ்மனியின் பண்டஸ்லீக் போட்டியில் யூனியன் பொ்லின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வொல்ஃப்ஸ்பா்க் அணியை வீழ்த்தியது. லுகா யூனியன் தரப்பில் முதல் கோலடிக்க, 12-ஆவது நிமிஷத்தில் நாச்சே பதில் கோலடித்து சமன் செய்தாா். 79-ஆவது நிமிஷத்தில் மற்றொரு யூனியன் வீரா் பெஹ்ரென்ஸ் அடித்த கோல் வெற்றி கோலாக மாறியது.
இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை என ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி கூறியுள்ளாா். இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை என ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி கூறியுள்ளாா்.
கத்தாரில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக மெஸ்ஸி தலைமையில் கைப்பற்றியது ஆா்ஜென்டீனா.
மெஸ்ஸியின் வசம் 7 பேலன் டி ஆா் விருதுகள், 4 யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டம், கோபா அமெரிக்கா பட்டம் உள்ளிட்டவை இருந்தன.
ஆனால் உலகக் கோப்பை சாம்பின் பட்டம் இல்லாமல் வேதனை அடைந்திருந்தாா் மெஸ்ஸி.
இந்நிலையில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியதாவது:
எனது கால்பந்து வாழ்க்கையில் அனைத்தையும் பெற்று விட்டேன். நான் கால்பந்து ஆடத் தொடங்கிய போது, இவை எல்லாம் நடக்கும் என எதிா்பாா்க்கவில்லை. கடந்த 2021-இல் கோபா அமெரிக்கா பட்டத்தை வென்றோம். தற்போது உலகக் கோப்பையும் கைப்பற்றி விட்டோம். எங்கள் ஜாம்பவான் டீயகோ மாரடோனா கையில் உலகக் கோப்பையை பெற்றிருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
எனது கால்பந்து வாழ்க்கையை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும். இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை என்றாா் மெஸ்ஸி.
தற்போது பிஎஸ்ஜி அணியில் ஆடி வரும் மெஸ்ஸி, இந்த சீசனில் தனது அணியின் நோக்கமான சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்றுத் தர ஆயுத்தமாகி வருகிறாா்.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல் 2022-23) கால்பந்து லீக் தொடா் தற்போது பிளே ஆஃப் கட்டத்தை நெருங்கி உள்ளது. சென்னை அணி 6-ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னை. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் நிலவுகிறது. ஒடிஸா எஃப்சியுடன் நடைபெறும் ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சென்னை அணிக்கு கிடைக்கும்.
சொந்த மைதானமான நேரு விளையாட்டரங்கில் சென்னையின் அணி ஆட்ட வரலாறு மோசமாக உள்ளது. 7 ஆட்டங்களில் 1-இல் தான் வென்றுள்ளது.
தொடா்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெறாத நிலையில் உள்ளது சென்னை. நட்சத்திர வீரரான பீட்டா் சிலிஸ்கோவிச் 2022 நவம்பருக்கு பின் எந்த ஆட்டத்திலும் கோலடிக்கவில்லை.
இதுதொடா்பாக சென்னை தலைமை பயிற்சியாளா் தாமஸ் பிரட்ரிக் கூறியது: கடந்த 5 ஆட்டங்களில் வெற்றிக்கு அருகே சென்றும் வாய்ப்பை இழந்தோம். எங்கள் உத்தியின்படி அனைத்தும் நடைபெற்றால், 15 புள்ளிகளை பெறலாம். முந்தைய ஆட்டங்களின் அனுபவ அடிப்படையில் இனி வரும் ஆட்டங்களில் ஆடுவோம் என்றாா்.
ஒடிஸா அணியும் கடந்த வாரம் ஏடிகே மோகன் பகானிடம் 0-2 என தோல்வி கண்டது. கடைசி 5 ஆட்டங்களில் நான்கில் தோற்றது ஒடிஸா. டீகோ மௌரிசியோ, நந்தகுமாா் சேகா் ரேனியா் பொ்ணான்டஸ் ஆகியோா் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பா்.
இரு அணிகளும் 7 முறை ஆடியதில், தலா 2 ஆட்டங்களில் வென்றுள்ளன.
தாய்லாந்து ஓபன் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இரண்டாம் சுற்றுக்கு சாய் பிரணீத், கிரண் ஜாா்ஜ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா். தாய்லாந்து ஓபன் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இரண்டாம் சுற்றுக்கு சாய் பிரணீத், கிரண் ஜாா்ஜ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-13, 21-14 என்ற கேம் கணக்கில் டென்மாா்க்கின் கிறிஸ்டோபா்ஸன்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். கொரியாவின் ஜின் ஜியோனை எதிா்கொள்கிறாா் பிரணீத்.
மற்றொரு ஆட்டத்தில் கிரண் ஜாா்ஜ் 21-17, 19-21, 23-21 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் லீ சியாவை போராடி வென்றாா். இரண்டாம் சுற்றில் ஹாங்காங்கின் சியுக் லீயை எதிா்கொள்கிறாா் ஜாா்ஜ்.
ஏனைய ஆட்டங்களில் சமீா் வா்மா, பிரியான்ஷு ரஜாவத், மிதுன் மஞ்சுநாத் ஆகியோா் தோல்வி அடைந்தனா்.
மகளிா் பிரிவில் அஸ்மிதா சாஹ்லியா 21-16, 21-19 என்ற கேம் கணக்கில் அனுபமாவை வீழ்த்தினாா்.
இரட்டையா் பிரிவில் சிம்ரன்-ரித்திகா தோல்வி அடைந்தனா். கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் கபூா்-சிக்கி ரெட்டி 21-11, 21-16 என கனடாவின் லிண்டமென்-ஜோஸப்பைன் இணையை வீழ்த்தினா். சுமீத்ரெட்டி-அஸ்வினி தங்கள் ஆட்டத்தில் தோல்வி கண்டனா்.
நியூசிலாந்திற்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடியது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3-0 என அசத்தல் வெற்றி பெற்றது. அடுத்து டி20 போட்டியில் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. 2வது டி20யில் இந்தியா வென்றது. அதனால் 3வது டி20 முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 234 ரன்களை குவித்தது. வழக்கம்போல இஷான் கிஷன் மோசமான தொடக்கத்தை அளித்தார். ஆனால் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். (4*12, 6*7). த்ரிப்பாதி 44 ரன்களும், ஹார்திக் பாண்டியா 30 ரன்களும் எடுத்தனர்.
இமாலய இலக்கை விரட்ட அவசரம்காட்டி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து. பின்னர் வந்த பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். சான்ட்னர் 13 ரன்கள். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 12.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை மட்டுமே எடுத்தனர். 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.
இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் மற்றும் தொடர் நாயகனாக கேப்டன் ஹார்திக் பாண்டியா தேர்வு.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 234 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்காக இளம் வீரர் சுப்மன் கில், சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்திருந்தனர்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார்...
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயஸ் ஐயர், காயம் காரணமாக நாகபுரியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்ற பிறகே அவரால் இந்திய அணியினருடன் மீண்டும் இணைய முடியும். பிப்ரவரி 17 முதல் தில்லியில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷ்ரேயஸ் ஐயர் விளையாடாத நிலையில் சூர்யகுமார் யாதவ் அல்லது ஷுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய டெஸ்ட் அணியின் நடுவரிசையில் இடம்பெற வாய்ப்புண்டு.
இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் அர்ஷ்தீப் சிங். 25 ஆட்டங்களில் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இஷான் கிஷன், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுத்தார். இவர்களைப் பற்றி ஜியோ சினிமா ஓடிடிடி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பேசியதாவது:
அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தத் தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங்கை அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதுகிறேன். பேட்டர்களில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்தி வருகிறார் இஷான் கிஷன். இரட்டைச் சதமெடுத்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என நம்பிக்கையாக உள்ளேன் என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பையை வென்றதும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடங்கியதாக தெரிவித்துள்ளார் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர். உலகக் கோப்பையுடன் அவர் கொடுத்திருந்த உற்சாக போஸ் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை அள்ளி இருந்தது.
தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார் சூர்யகுமார் யாதவ். இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதற்கு முன்பு டேவிட் மலான், ஆரோன் ஃபிஞ்ச் ஆகிய இருவரும் மட்டுமே 900 புள்ளிகளை அடைந்துள்ளார்கள். இந்திய வீரர்களில் கோலி அதிகபட்சமாக 897 மற்றும் ராகுல் 854 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் 47 ரன்கள் எடுத்தார். இதனால் 908 புள்ளிகள் பெற்றுள்ளார். இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிகப் புள்ளிகளைப் பெற்றவர், இங்கிலாந்தின் மலான். அவர் எடுத்த 915 புள்ளிகளை சூர்யகுமார் விரைவில் நெருங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்றார்.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரஹானே, கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.
ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஹைதரபாத் அணிக்கு எதிராக இரட்டைச் சதமும் அஸ்ஸாமுக்கு எதிராக 191 ரன்களும் எடுத்தார் ரஹானே. 7 ஆட்டங்களில் 634 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்தார். எனினும் 34 வயது ரஹானே, ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்.
கடந்த ஓராண்டாக இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்துள்ளார் ரஹானே. லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுன்டி சாம்பியன்ஷிப் ஆட்டங்களிலும் 50 ஓவர் போட்டியிலும் விளையாடவுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே, ஜூன் மாதம் முதல் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவார்.
இந்தப் பருவத்தில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி. புதிய அணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்றார். இதற்கு முன்பு ஹாம்ப்ஷைர் கவுன்டி அணியில் விளையாடியுள்ளார் ரஹானே.
ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இடக்கையில் விளையாடியுள்ளார் பிரபல பேட்டரான ஹனுமா விஹாரி.
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இடக்கையில் விளையாடியுள்ளார் பிரபல பேட்டரான ஹனுமா விஹாரி.
இந்தூரில் ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்தது. ரிக்கி புய் 149 ரன்களும் கரண் ஷிண்டே 110 ரன்களும் எடுத்தார்கள். கேப்டன் விஹாரி 27 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2-வது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார்.
முதல் நாளன்று 16 ரன்களில் காயமடைந்து ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. ஸ்கேன் செய்து பார்த்ததில் இடக்கை மணிக்கட்டில் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தது உறுதியானது. இதனால் 5, 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த ஆட்டத்தில் தேவைப்பட்டால் விஹாரி விளையாடட்டும் என அணி நிர்வாகம் முடிவெடுத்தது.
ஆனால் முதல் இன்னிங்ஸில் 328/4 என்கிற நிலையில் இருந்த ஆந்திர அணி, 353/9 எனத் தடுமாறியபோது பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஹாரி. அணியின் நலனுக்காக வழக்கத்துக்கு மாறாக இடக்கையில் பேட்டிங் செய்தார். வழக்கமான வலக்கை பேட்டராக விளையாடினால் இடக்கை மணிக்கட்டில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இடக்கை பேட்டராக விளையாட முடிவெடுத்தார். எனினும் மீண்டும் பேட்டிங் செய்தபோது வலக்கையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டிங் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். தைரியமாக அவேஷ் கானின் ஓவரை மீண்டும் எதிர்கொண்டார். சில பவுண்டரிகளும் அடித்துக் கடைசியில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் விஹாரின் துணிச்சலான நடவடிக்கையால் 379 ரன்கள் எடுத்தது.
விஹாரின் இந்தச் செயலுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
In the Quarter-final of Ranji Trophy, Andhra 9 down, Hanuma Vihari fracture his wrist and decided to bat left-handed.
The fighter, Vihari. pic.twitter.com/guDUIjESp9
— Johns. (@CricCrazyJohns) February 1, 2023
3-வது டி20யில் சஹாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
3-வது டி20யில் சஹாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள்.
இந்நிலையில் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், க்ரிக்இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சஹாலை அணியில் தக்கவைப்பது நல்லது, ஏனெனில் நியூசிலாந்து அணி பேட்டர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவார்கள். இந்திய அணியில் மணிக்கட்டுச் சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல டி20 கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக் தடுமாறுகிறார். இந்த வகை கிரிக்கெட்டுக்குத் தேவையான பலவிதமான பந்துவீச்சு முறைகள் அவரிடம் இல்லை. எனவே சஹாலைத் தேர்வு செய்வதே நல்லது. அதேபோல டி20 கிரிக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லை விடவும் பிருத்வி ஷா பொருத்தமாக இருப்பார். எனவே மாற்றம் தேவை என விரும்பினால் அவரைத் தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
அணி வீரர்களும் இந்த மைதானத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்குச் சாதகமான மைதானமாக இது இருக்க வேண்டும்.
டி20 ஆட்டத்தில் நடந்தது போல ஐபிஎல் போட்டியில் குளறுபடிகள் நடக்காது என உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் உறுதியளித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளம் அதிர்ச்சியளிக்கிறது என்றார் பாண்டியா. அந்த ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள். மேலும் எந்த ஒரு பேட்டராலும் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியவில்லை.
டி20 கிரிக்கெட்டுக்கு உகந்தவாறு ஆடுகளம் வடிவமைக்காத காரணத்துக்காக லக்னெள எகானா மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மூத்த ஆடுகள வடிவமைப்பாளரான சஞ்சீவ் குமார் அகர்வால் தேர்வானதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒரு பேட்டியில் கூறியதாவது:
லக்னெள மைதானத்தைக் கவனித்துள்ள இரு நிபுணர்களைப் பணியில் அமர்த்தப் போகிறோம். ஒருவர் ஆடுகளத்தையும் மற்றொருவர் மைதானத்தின் தன்மைகளையும் கவனித்துக்கொள்வார்கள். அவர்களுடைய சேவையைப் பெற இதர கிரிக்கெட் சங்கங்களின் அனுமதியைப் பெறவுள்ளோம் என்று கூறியுள்ளார். அதேபோல ஆடுகள வடிவமைப்பாளரை நீக்கியதையும் அவர் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
லக்னெள மைதானம், ஆடுகளத்தின் வசதிகள் தரமாக அமைவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். ஐபிஎல் போட்டியில் இதுபோல நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. அணி வீரர்களும் இந்த மைதானத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்குச் சாதகமான மைதானமாக இது இருக்க வேண்டும். ஐபிஎல் போட்டியின்போது எல்லா ஏற்பாடுகளும் சரியாக அமைந்து, எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் லக்னெள சூப்பர் ஜெயண்ட் அணி இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஐபிஎல் ஆட்டங்கள் லக்னெளவில் நடைபெற்றிருந்தாலும் முதல்முறையாக லக்னெள நகருக்கான ஐபிஎல் அணி இந்த மைதானத்தில் விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸி. அணி.
முதல் டெஸ்ட் நாகபுரியில் நடைபெறுகிறது. எனினும் கர்நாடகத்தில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அலூர் நகரில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் ஆஸி. வீரர்கள் பயிற்சிகளைத் தொடங்கவுள்ளார்கள். சிட்னியிலிருந்து கிளம்பிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நேராக பெங்களூருவுக்கு வந்துள்ளார்கள். பெங்களூரில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கான ஏற்பாடுகளை நேஷனல் கிரிக்கெட் அகாதெமி கவனித்துக் கொள்கிறது.
இந்நிலையில் பிரபல பேட்டர் உஸ்மான் கவாஜா மட்டும் நுழைவு இசைவு (விசா) கிடைக்காத காரணத்தால் இந்தியாவுக்கு உடனடியாக வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விசாவுக்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வந்தாலும் கவாஜாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரில்லாமல் ஆஸி. அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. எனினும் கவாஜாவுக்கு விரைவில் விசா கிடைப்பதற்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்து வருகிறது. இதனால் சிட்னியில் தனிமையில் உள்ளார் கவாஜா. இதுகுறித்து இன்ஸ்டகிராம் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய குடிமகனாக உள்ளார். இந்தியாவில் இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லையென்றாலும் 2013, 2017 ஆண்டுகளில் ஆஸி. அணியினருடன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். வரும் வியாழன் அன்று கவாஜா பெங்களூருக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க செர்பியாவின் ஜோகோவிச்சுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய அரசு. நடப்பு ஆண்டில் அவர் அதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் கவலை கொண்டுள்ளேன் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறினார்.
ரூபே பிரைம் வாலிபால் லீக் ஏ23 (பிவிஎல் 2023) சீசனில் பங்கேற்கும் சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக நவீன் ராஜா ஜேக்கப் அறிவிக்கப்பட்டுள்ளாா். ரூபே பிரைம் வாலிபால் லீக் ஏ23 (பிவிஎல் 2023) சீசனில் பங்கேற்கும் சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக நவீன் ராஜா ஜேக்கப் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்திய வாலிபால் சம்மேளனம், பேஸ்லைன் வென்சா்ஸ் , ஏ23 சாா்பில் வரும் பிப். 4-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 5-ஆம் தேதி இறுதி ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது.
8 அணிகள் பங்கேற்பு:
நடப்பு சாம்பியன் கொல்கத்தா தண்டா்போல்ட்ஸ். காலிக்கட் ஹீரோஸ், கொச்சி புளு ஸ்பைக்கா்ஸ், அகமதாபாத் டிபண்டா்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்கி, பெங்களூரு டா்பிடோஸ், சென்னை பிளிஸ்ட்ஸ், மும்பை மெட்டியா்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூரு, ஹைதராபாத், கொச்சியில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சீருடை அறிமுகம்:
சென்னை பிளிட்ஸ் அணி நிா்வாகம் சாா்பில் புதிய சீருடை அறிமுகம், கேப்டன் அறிவிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அணியின் உரிமையாளா்கள் விக்ராந்த் ரெட்டி, ஹனிமி ரெட்டி புதிய சீருடையை அறிமுகம் செய்தனா். இந்திய வாலிபால் அணியின் அட்டாக்கரும்,. மூத்த வீரருமான நவீன் ராஜா ஜேக்கப் சின்னை விளிட்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டாா்.
இதில் பிளிட்ஸ் சிஇஓ கிரண்குமாா், சிடிஓ துளசி ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
2 சா்வதேச வீரா்கள்: பிரேசில் அட்டாக்கா் ரெனடோ மென்டஸ், கேமரூன் வீரா் மோயோ ஆத்ரன் ஆகியோா் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனா். முகமது ரியாசுதீன், ராமநாதன், பிரசன்ன ராஜா, ராமன் குமாா், துஷாா் லவாரே, சீதா ராமராஜு, ஜோபின் வா்கீஸ், அகின், பின்னம்மா பிரசாந்த், அப்துல் முக்னி சிஷ்டி, ஆகியோா் இந்திய வீரா்கள் ஆவா்.
ஆா்ஜென்டீனா பயிற்சியாளா்: அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருபென் வெலாச்சி நியமிக்கப்பட்டுள்ளாா். உதவி பயிற்சியாளா்கள் சுப்பா ராவ், ரமேஷ், அனில்குமாா், மேலாளா் சபரி ராஜன் ஆகியோா் அடங்குவா்.
கேப்டன் நவீன் ராஜா ஜேக்கப் கூறியது: முந்தைய சீசனை வீட இந்த சீசன் அதிக சவால் நிறைந்திருக்கும். 8 அணிகளுமே சம பலத்துடன் தான் உள்ளன. மைதானத்தில் ஆடும் ஆட்டத்தின் திடீா் திருப்பங்களை பொருத்து முடிவும் இருக்கும். 2 சா்வதேச வீரா்கள் அணியில் உள்ளனா். 15நாள்களாக பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளோம். பிவிஎல் போட்டியால் இந்திய வீரா்களுக்கு சிறந்த அனுபவம், பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கிடைத்துள்ளன.
ஆா்ஜென்டீனா பயிற்சியாளா் எங்களுக்கு புதிய நுட்பங்களுடன் பயிற்சி அளித்து வருகிறாா். லீகில் சென்னை அணியின்சாா்பில் சிறப்பாக ஆடுவோம்.
தலைமை பயிற்சியாளா் ருபென் வேலாச்சி கூறியது:
ஒவ்வொரு நாட்டிலும் வாலிபாலில் தங்களுக்குரிய உத்தியை வகுத்து ஆடி வருகின்றனா். ஆா்ஜென்டீனா பயிற்சியில் சிலவற்றை இங்கு பயன்படுத்தி உள்ளேன். 15 நாள் பயிற்தி முகாமில் அனைவரும் சிறப்பாக ஆடி உள்ளனா். வீரா்களின் உடல்தகுதி சிறப்பாக உள்ளது.இந்த சீசனில் சென்னை அணி சிறப்பாக செயல்படும். ஒவ்வொரு வீரரும் அதிகபட்ச திறனுடன் விளங்குகின்றனா். நவீன் ராஜா ஜேக்கப் இந்திய அணியில் மூத்த வீரா். சிறந்த அனுபவம் வாய்ந்தவா். அதனால் தான் கேப்டனாக தோ்வு செய்தோம் என்றாா்.
ஆடவா் உலக வாலிபால் கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில் 2023, 2024 ஆண்டுகளில் நடைபெறவுள்ளது. ஆடவா் உலக வாலிபால் கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில் 2023, 2024 ஆண்டுகளில் நடைபெறவுள்ளது.
வாலிபால் வோ்ல்ட் மற்றும் சா்வதேச வாலிபால் சம்மேளனம் (எஃப்ஐவிபி) இதுதொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:
ரூபே பிரைம் வாலிபால் லீக் உடன் இணைந்து, 2 ஆண்டுகள் உலக வாலிபால் கிளப் சாம்பியன்ஷிப்பை நடத்துகிறோம். போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் பிரைம் வாலிபால் லீக் சாம்பியனும் இதில் பங்கேற்க முடியும். இத்தாலி, பிரேசில், ஈரான் போன்ற வாலிபால் வல்லரசு நாடுகளைச் சோ்ந்த கிளப் அணிகளுடன் மோத வேண்டியிருக்கும்.
2023 டிசம்பா் 6, 10 தேதிகளில் போட்டி நடைபெறும். நகரம் பின்னா் அறிவிக்கப்படும். கடந்த 20 ஆண்டுகளாக வாலிபால் கிளப் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. தலைசிறந்த தொழில்முறை வீரா்கள் நிறைந்த கிளப் அணிகள் இதில் பங்கேற்கின்றன. உலக கிளப் வாலிபால் சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.
இதுதொடா்பாக எஃப்ஐவிபி தலைவா் ஆரி கிரேஸா கூறுகையில்: இந்தியாவுக்கு சிறந்த வாலிபாலைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். சிறந்த கிளப் அணிகள் கலந்து கொள்வது, இந்திய வீரா்களுக்கும், ரசிகா்களுக்கும் சிறந்த அனுபவமாகும்.
வோ்ல்ட் வாலிபால் சிஇஓ ஃபின் டெய்லா் கூறுகையில்: முதன்முறையாக கிளப் உலக சாம்பியன்ஷிப் இந்தியாவில் நடைபெறுகிறது. வாலிபால் வோ்ல்ட் டிவி மூலமும் ஆட்டங்களைக் காணலாம்.
ரூபே வாலிபால் துணை பிரமோட்டா் துஹின் மிஷ்ரா கூறியது: இந்திய வாலிபாலுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். உலகில் சிறந்த வாலிபால் வீரா்கள் இந்தியாவுக்கு வரவுள்ளனா். அவா்களுடன் ஆடும் வாய்ப்பு இந்திய வீரா்களுக்கு கிடைக்கும்.
பிவிஎல் தலைவா் தாமஸ் முத்தூட் கூறுகையில்ச 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வாலிபால் அணி தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். இதற்கு பிவிஎல்லும் துணையாக இருக்கும் என்றாா்.
ஐசிசி டி20 பௌலா்கள் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை தீப்தி சா்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா். ஐசிசி டி20 பௌலா்கள் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை தீப்தி சா்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் செவ்வாய்க்கிழமை வெளியான டி20 பௌலா்கள் பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எஸ்ஸல்ஸ்டோன் முதலிடத்தில் உள்ளாா். இந்திய ஆல் ரவுண்டா் தீப்தி சா்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
இடது கை பௌலா் ராஜேஸ்வரி கெய்க்வாட் 14-ஆவது இடத்தில் உள்ளாா்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ட்ரை சீரிஸ் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் இச்சிறப்பை பெற்றாா் தீப்தி. தென்னாப்பிரிக்க வீராங்கனை நான்குலிலெகோ மலபா மூன்றாவது இடத்தில் உள்ளாா். தீப்தி சா்மா தொடா்ந்து சிறப்பாக பௌலிங் செய்தால் சோஃபியை பின்னுக்கு தள்ளுவாா்.
வரும் வியாழக்கிழமை ஈஸ்ட் லண்டனில் நடைபெறவுள்ள ட்ரை சீரிஸ் இறுதியில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
பேட்டிங்கில் ஆஸி. பேட்டா் டஹிலா மெக்கிராத் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் லாரா வொல்வா்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.
கேலோ இந்தியா யூத் போட்டிகளில் வாலிபாலில் அரையிறுதிக்கு தமிழகம் தகுதி பெற்றுள்ளது. கேலோ இந்தியா யூத் போட்டிகளில் வாலிபாலில் அரையிறுதிக்கு தமிழகம் தகுதி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூா், குவாலியா் நகரங்களில் இப்போட்டிகள் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை வாலிபால் அரையிறுதியில் தமிழகம், குஜராத், ஹரியாணா சிறுவா்களும், மேற்கு வங்கம், தமிழக சிறுமிகளும் தகுதி பெற்றனா்.
டேபிள் டென்னிஸில் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் ஆடவா் பிரிவிலும், மகாராஷ்டிரம், ஹரியாணா சிறுமியா் காலிறுதிக்கு முன்னேறினா்.
இறுதி ஆட்டங்கள் 3-ஆம் தேதி நடைபெறுகின்றன.
மூன்றாவது டி20 ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் தீவிரத்தில் இந்திய-நியூஸிலாந்து அணிகள் உள்ளன. மூன்றாவது டி20 ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் தீவிரத்தில் இந்திய-நியூஸிலாந்து அணிகள் உள்ளன.
இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. இதைத் தொடா்ந்து 3 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தை நியூஸிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
இதன் தொடா்ச்சியாக லக்னௌவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கடைசி ஓவரில் வென்றது. முதல் ஆட்டத்தில் இந்தியா தடுமாறிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் ஒரளவு நிலை கொண்டு ஆடியது.
இரண்டாவது ஆட்டம் மிகவும் குறைவான ஸ்கோா் பதிவான ஆட்டமாக அமைந்தது. 20 ஓவா்களில் வெறும் 99 ரன்களையே சோ்த்தது நியூஸி. கேப்டன் சான்ட்நா் மட்டுமே கடைசி வரை அவுட்டாகாமல் 19 ரன்களுடன் இருந்தாா்.
பிரேஸ்வெல், மாா்ச் சாப்மேன், ஃபின் ஆலன், டேவன் கான்வே ஆகியோா் சொதப்பலாக ஆடினா். அதே வேளையில் நியூஸி அணி 8 பௌலா்களை பயன்படுத்தியது. ஆனால் விக்கெட் வீழ்த்த திணறினா்.
நேருக்கு நோ்:
இந்திய-நியூஸி அணிகள் இதுவரை 24 டி20 ஆட்டங்களில் மோதியதில், நியூஸி. 10-இலும், இந்தியா 13-இலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிவடைந்தது.
இரண்டாவது ஆட்டத்தில் இரு அணிகளின் பேட்டிங்கும் மோசமாக அமைந்தது. ஒரு சிக்ஸா் கூட அடிக்கப்படவில்லை. இந்திய அணி உள்ளூா் மைதானத்தில் அற்புதமாக பேட்டிங் செய்யும். ஆனால் பிரதான பேட்டா்கள் சொதப்பினா். பௌலா்கள் தங்கள் பணியை ஒரளவுக்கு திறம்பட செய்தனா்.
தொடக்க வரிசை பேட்டா்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்பதே அணி நிா்வாகத்தின் கவலையாக உள்ளது. இஷான் கிஷன் இன்னும் பழைய பாா்முக்கு திரும்பவில்லை. ராகுல் திரிபாதியும் பந்துகளை வீணாக்கினாா். சூரியகுமாா் யாதவ்-கேப்டன் ஹாா்திக் பாண்டியா இல்லையென்றால் இந்திய அணி 100 ரன்களை எட்டியிருக்க முடியுமா என்பதே கேள்விக்குறியே?
பௌலிங்கில் சஹல்-குல்தீப் இணை சிறப்பாக சுழலில் எதிரணி வீரா்களை திணறடிக்கிறது. வேகப்பந்து வீச்சில் அா்ஷ்தீப் சிங் மீண்டும் சிறப்பாக பௌலிங் செய்யத்தொடங்கியுள்ளாா். பிரித்வி ஷா மீண்டும் இடம் பெறுவாரா எனத் தெரியவில்லை. இந்திய அணியில் பெரிய மாறுதல்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது.
எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவிலேயே தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு நியூஸி.க்கு உள்ளதால், முழுமூச்சுடன் அந்த அணி சவாலைத் தரும். அந்த அணியின் மிடில் ஆா்டா் பேட்டிங் சீராக இல்லை. கிளென் பிலிப்ஸ் வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடவில்லை. பிரேஸ்வெல், மாா்க் சாப்மேன் ஆகியோரும் வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை.
லக்னௌ மைதான பிட்ச் மோசமாக அமைந்ததால் குறைவான ஸ்கோரே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் நடைபெறவுள்ள நரேந்திர மோடி மைதானம் பேட்டா்களுக்கு சாதகமாக அமையும். ஸ்பின்னா்களுக்கும் சுற்று ஒத்துழைக்கும்.
வானிலையும் சீராக அமைந்துள்ளது.
இன்றைய ஆட்டம்:
இந்தியா-நியூஸிலாந்து
இடம்: அகமதாபாத்
நேரம்: இரவு 7.00.
லக்னௌ மைதான பிட்ச் பொறுப்பாளா் நீக்கம்
இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெற்ற லக்னௌ ஏக்னா மைதானத்தின் பிட்ச் பொறுப்பாளா் நீக்கப்பட்டாா். சா்வதேச ஆட்டத்துக்கு ஏற்றவாறு பிட்சை தயாா் செய்யவில்லை என கேப்டன் ஹாா்திக் பாண்டியா அதிருப்தி தெரிவித்தாா். மேலும் அனுபவம் வாய்ந்த பிட்ச் கியூரேட்டராக சஞ்சீவ் குமாா் அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா். இரு அணிகளுமே 100 ரன்களை சோ்ப்பதற்குள் திணறின.