அதிமுகவில் ஈபிஎஸ் அல்லது ஓபிஎஸ் அணிகளில் யாராவது ஒருவரை ஆதரிக்க வேண்டும் அல்லது இருவரையும் ஒதுக்கிட விட்டு தனியாக ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக மாநிலத்தலைமை தள்ளப்பட்டு இருக்கிறது.
"2023-24-ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது," என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட் அறிக்கையில் பொதுவாக சாதகமான அம்சங்கள் இருப்பதாகத் தோன்றினாலும் அதில் சில சந்தேகங்களும் சில துறைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களும் காணப்படுகின்றன.
எமது ஆட்சிக் காலத்தில், இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றமை குறித்து உயிரிழந்த மக்கள், அங்கங்களை இழந்து, ஓரிடத்தில் முடங்கியுள்ள மக்களிடமும், இறைவனிடமும் விசேடமாக மன்னிப்பு கோருகின்றேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சரவணகுமாரின் உடலைக் கைப்பற்றினர்.
மத்திய பட்ஜெட் 2023-24ல் எதிர்பார்க்கப்பட்டபடியே வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுதவிர, பல்வேறு பிரிவினருக்கும் வேறு சில சலுகைகளும், சில மானிய ரத்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் தானே பகுதியில் பரபரப்பான மேம்பாலத்திற்கு கீழே ஷிப்பிங் கண்டெய்னர்களில் இயங்கிவருகிறது சிக்னல் பள்ளி. தெருக்களில் வசிக்கும் குழந்தைகளும், சிக்னல்களில் பொருட்கள் விற்பனை செய்யும் குழந்தைகளும் இந்தப் பள்ளியில் பயில்கின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டபடியே வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
எடப்பாடி தரப்பு தற்போது வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அவர் இதுவரை வெளியிட்ட அறிவிப்புகளில் இடம் பிடித்த முக்கிய 10 அம்சங்கள் என்ன?
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக சந்தை மூலதன மதிப்பு வீழ்ந்ததால் இக்கட்டான நிலையில் இருந்த அதானி குழுமத்திற்கு அபுதாபியைச் சேர்ந்த இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் உயிர் கொடுத்துள்ளது. அதானி குழுமத்துடன் அதற்குள்ள தொடர்பு என்ன? இந்த முடிவுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
2023-34ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், புதிய வரி விதிப்புகள் இருக்காது, மக்களைக் கவரும புதிய திட்டங்கள், சலுகைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக கடலில் ஆழ்துளைகள் போடப்பட்டு பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இது மீட்டெடுக்க முடியாத நிரந்தர சூழலியல் பாதிப்புகளுக்கு வழிவகை செய்து விடும்.
ரஷ்ய படையெடுப்பை அடுத்து, மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு நேட்டோ தரநிலை ஆயுதங்களைவிட வார்சா ஒப்பந்த தர ஆயுதங்களை வழங்கவே ஆர்வமாக இருந்தன. ஏனெனில் யுக்ரேனின் ஆயுதப்படைகள் பயிற்சி பெற்ற வீரர்கள், தேவையான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு திறன்களுடன் தயார் நிலையில் இருந்தன.
ஆசாராமின் வழக்கறிஞர் சிபி குப்தா, "இது 2001 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்று கூறப்பட்டாலும் 2013இல் தான் புகார் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்று கூறினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை ராகுல்காந்தியை எதிர்க்கட்சிகளின் முகமாக மாற்றியுள்ளதா என்ற கேள்வி தேசிய அரசியலில் முன்வைக்கப்படுகிறது. இந்த யாத்திரையின் நோக்கம் என்ன? ராகுல் நினைத்ததை சாதித்தாரா?
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய வங்கக்கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக நடந்த பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
"இந்தியாவில் குடியரசு தலைவர் பதவியில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட மாட்டார். ஆனால் பாஜக அரசு தனது அடுத்த தேர்தல் பிரசாரத்தை அவர் மூலம் நடத்துவது போல் தெரிகிறது. அவரது முழு பேச்சும் தேர்தல் உரையாகவே இருந்தது," என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறினார்.
ஆந்திராவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மின்சாரம், தொலைபேசி, டிவி, இணையம் என்று எதுவுமே வேண்டாம் என்று பழங்கால முறையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
"ஜிடிபி வளர்ச்சி குறித்த கணிப்பு சிறப்பாக இருந்தாலும் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. சமத்துவமின்மையும் மோசமடைந்துள்ளது. இந்த ஆண்டு கடும் பொருளாதார சவால்களை இந்திய அரசு எதிர்கொள்கிறது."
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், மூன்றே நாட்களில் அதானி குழுமம் 5.6 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இக்கட்டான நிலையில் இருக்கும் அதானி குழுமத்திற்கு அபுதாபியில் இருந்து நேசக்கரங்கள் நீண்டுள்ளன.
பழங்குடி மக்களின் வாழ்வை மாற்றிய ஆரோக்யசதி - ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளை தொலைதூர பழங்குடி கிராமத்தில் குறைக்க பெண்களை மையமாக கொண்ட ஒரு அமைப்பை கட்டி எழுப்பி சாதனை படைத்துள்ளது
தமிழ்நாட்டில் ஜனநாயகம் பற்றிப் பேசும் தருணங்களில் உத்திரமேரூர் கல்வெட்டு சுட்டிக்காட்டப்படுவது வழக்கமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் மிகத் தூய்மையாக இருந்ததற்குச் சான்றாக இந்தக் கல்வெட்டுகள் விளங்குகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வரலாறு படைத்தனர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஐயப்பன் கோவிலில் வழிபடும் தைரியம் அவர்களுக்கு கிடைத்தது.
அதானி குழுமத்தில் செய்த முதலீட்டால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதுவரை அதானி குழுமத்தில் ரூ. 36,474.78 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு ரூ. 56,142 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) விளக்கம் அளித்துள்ளது.