தமிழ்நாடு லாரி உரிமையாளர் மாநில தலைவர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது கர்நாடகா தமிழ்நாடு இடையே காவிரி பிரச்சனை இருந்து வரும் நிலையில் கர்நாடகா பகுதிக்கு செல்லும் பொழுது தமிழக லாரி ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் தற்போது கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் லாரிகள் அந்தந்த எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் நரசிங்கபுரம் ஊராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாக்கடை மற்றும் தார் சாலை அமைக்கும் பணியில் நகராட்சியினர் அலட்சியம் காட்டி வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதில் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். அதனை தொடர்ந்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் பரணி தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கேஆர் டில்லி குமார் என்பவர் முகநூல் பக்கத்திலும் நேரிலும் அதிமுக கவுன்சிலர்களை சந்தித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாமக கூட்டணி கவுன்சிலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி உடைந்துள்ள நிலையில் புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எந்தப் பாதையில் செல்லும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் அறிவித்த நிலையில் கோவையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி முறிவு குறித்து ஒரு வரியில் பதிலளித்துள்ளார்.
புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் விலைவாசி உயர்வு, திமுக தேர்தல் வாக்குறுதி, நூறு நாள் வேலை திட்டம் போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களை காக்க வைத்து விட்டு அதிகாரிகள் ஆய்வு கூட்டம் வாரந்தோறும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் கூட்டணியில் பாஜக இல்லை என்பதை அதிமுக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு, அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் "நன்றி மீண்டும் வராதீர்கள்" என்று ஹேஷ்டேக் பதிவிடப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு விஷ்வ இந்து பரிசத் பிரமுகர் பாலியல் தொல்லை அளிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் எத்திலப்பன்பட்டி ஆர்ஆர் நகர், கன்னிச்சேரி, உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதினால் அவ்வழியாக செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் அரசு மதுபான கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கி உள்ளனர்.
பூமிக்கு அருகே ஒரு பிரம்மாண்ட மலையை போல சுற்றி வரும் பென்னு விண்கல், நமது பூமியை விட ஏன் நமது சூரியக் குடும்பத்தை விட பழமையானது எனக் கூறப்படுகிறது. எனவே, தற்போது அதில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை ஆராய்ச்சி செய்தால் பூமியின் தோற்றத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அநேகமாக இன்று அடுத்த ஆதி குணசேகரன் யார் என தெரிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னை மனுதாரராக இணைக்க வேண்டும் என ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி அரசு மாணவர்கள் விடுதிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டதில் குளறுபடி நடந்ததினை அடுத்து விடுதி வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிட்டார்.
அவிநாசி அருகே முதல்வர் கிராம மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலை தரமற்று இருந்ததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். தரமற்ற சாலை வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பள்ளிக்கல்வி துறையின் தற்போதைய இயக்குனர் அறிவொளி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.