நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று (ஏப். 19) முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மக்கள் மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பதால், தேர்தல் நாளான இன்று வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு
மின்னணு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், உடலியக்கம் பாதிக்கப்பட்டவர்கள் ‘சக்சம்’ கைபேசி செயலி அல்லது ‘1950’ உதவி எண்ணில் பதிவு செய்தால், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக வீடு மற்றும் வாக்குச்சாவடி இடையில் இலவச போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏற்றுக்கொள்ளத்தகாத விமர்சனங்களை திமுகவினர் வைத்தபோது, அதை எதிர்கொண்டு விளக்கம் அளித்தோம். மத்திய சென்னை தொகுதி தேர்தல் முடிவு துக்ககரமாக வரும் என்பது தயாநிதி மாறனுக்குத் தெரிந்துவிட்டதுபோல் தெரிகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் - கூடூர், அரக்கோணம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் மொத்தம் 128 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன.
75 சதவீத தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தவில்லை என பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அனைத்து இளைஞர்களையும் கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயல்,திறமையில் சிறந்தவர்களாக மாற்றவேண்டும் என்ற உணர்வுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் 28 லட்சம்இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஆடிட்டர் ஒருவரது வீடு, தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவரது வீடு, மண்ணடியில் ஒருவரது வீடு என சென்னையில்5 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தைரியம் ஜம்மு காஷ்மீரில் இன்று யாருக்கும் இல்லை என்றும், பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் யாரேனும் அதிகபட்சமாக பலன் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சென்னையில் 2,400 வாக்குச்சாவடிகளை இணைய வழியில் `வெப்காஸ்டிங் முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி 20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக விலகிய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக மாற்று வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் பாஜகவை எதிர்த்து தாக்குர் சமூகத்தினர் பஞ்சாயத்துகளை நடத்தி வருகின்றனர். ‘சத்ரிய ஸ்வபிமான் பஞ்சாயத்து’ எனும் பெயரிலான இக்கூட்டங்கள், பாஜகவை கவலை அடையச் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ கிராமத்தைச் சேர்ந்த மூன்று வாய்பேச முடியாத சகோதரிகள் இன்று முதல் முறையாக வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அமனதுல்லா கான் (50). இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வலுவான கம்பேக் கொடுப்பார் என தாங்கள் நம்புவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ட்ரெவர் பென்னி தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி 39 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் விரிவாக்கப்பட்ட அங்கம் (Wing) ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தெடுக்கப்பட்ட பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.