வருகின்ற ஏப்ரல் 19, 2023 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தெரிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வலுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கும்பகோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கழுத்தில் பதாகை அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியர்களான சூர்யா-ஜோதிகா இணையர் மும்பை மாநகரில் 9,000 சதுர அடியில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல். இருந்தாலும் இது குறித்து சூர்யா-ஜோதிகா தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ, பிரிட்டனில் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல். லிவர்பூலில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் சுயநினைவை இழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 398 புள்ளிகள் (0.69 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,527 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி131 புள்ளிகள் (0.77 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 16,945 ஆக இருந்தது.
ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல்காந்திக்கும் அது பொருந்தும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதன்மை எண்ணிக்கை பெற்றுள்ள எதிர்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரை தகுதி நீக்கம் செய்திருப்பது அசாதாரண நடவடிக்கையாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் ஏடிகே மோகன் பகான் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், 1975ம் ஆண்டு இதேபோன்று இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவசர நிலையை கொண்டு வந்தது போல் கொண்டு வந்திருக்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
ஏழு வயது குழந்தையை கொலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பொதுப் பணித்துறையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க கோரி மூலகுளம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தண்ணீர் டேங்க் மீது ஏறி பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழகத்திலும் களம் மாறிவிட்டது, யாரைப் பார்த்தாலும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக தமிழகத்திலும் களம் மாறி அந்த நம்பிக்கை வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
“உள்துறை அமைச்சகம் அனுமதி கிடைத்தவுடன் மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிச்சயம் தரும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அஞ்சாதே என்ற தலைப்புடன் அவரது புகைப்படம் முகப்புப்படமாக மாற்றப்பட்டுள்ளது.
"இப்போதும் நான் உங்கள் முதுகில் எனது அழுக்கைத் துடைத்ததாகத்தானே சொல்வார்கள்" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.