ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெறுவதால், தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 234 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்காக இளம் வீரர் சுப்மன் கில், சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்திருந்தனர்.
தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதற்கான திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அனைத்து மாநகரங்கள், நகரங்களில் கழிவுநீர் குழாய்களின் அடைப்புகளை அகற்றும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வர நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது புரட்சியான செயல் ஆகும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ரூபாய் மதிப்பு குறைந்து வரும் சூழலிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வரும் நிலையிலும், 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படி எட்ட முடியும்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பையை வென்றதும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடங்கியதாக தெரிவித்துள்ளார் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர். உலகக் கோப்பையுடன் அவர் கொடுத்திருந்த உற்சாக போஸ் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை அள்ளி இருந்தது.
இந்திய விமானப் படையின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் ஒரு விமானி உயிரிழந்தார். 2 விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பினர். மரங்கள் மீது விழுந்த அவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை ஒரு போதும் விமர்சிக்க மாட்டேன் என கர்நாடக பாஜக அமைச்சர் கே.சி.நாராயண கவுடா கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் முழுமையாக அதுவும் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் பெரிதாக இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் தனது பதிலுரையில் அளித்திட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயமானது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற இளமையாக்கினார் கோயில் உள்ளது
அடுத்த வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலமாக இருக்கும் என்று நம்முடைய பிரதமர் கூறியிருப்பதால், அந்த 25 வருடத்துக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கும் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க மறந்து விட்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்காவதி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியும், பெல்லாரி தொகுதியில் அவரது மனைவி அருணா லட்சுமியும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கத்தால், மாமரங்களில் பூக்களைத் தொடர்ந்து பிஞ்சுகளும் உதிர்ந்து வருகின்றன. இதனால், மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்
தென் மாவட்டங்களின் முக்கிய மருத்துவமனையாகத் திகழும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செல்லும் சாலை ஆக்கிரமிப்புகளால் நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும்
வேப்பூர் அருகே உரிய அனுமதியின்றி 55 பனை மரங்கள் வெட்டிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்கும் வகையில்
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் நேற்று இரவு பழங்குடி பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் முதுமலை மசினகுடி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 26-ம் தேதி நடக்கிறது. இந்தோ - கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி
திருச்சி கலையரங்கம் வளாகத்தில் 3.12.2022 அன்று நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நடத்திய வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்துக்கான பணிகளை செய்ய ரூ.38.98 லட்சம் செலவிடப்பட்டதற்கு ஒப்புதல்