சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடர்பான வழக்கைத் திரும்பப் பெற்று சபாநாயகர் 15 -20 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? என விளக்கமளிக்க, மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேசுவரர் கோயில் கோபுரம், கிறிஸ்துவ தேவாலய கோபுரமும் முழுவதும் வெளியே தெரிகிறது.
உள்நாட்டு விமானத்தில் தங்கல் கட்டிகள் கொண்டு வரலாமா என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து சுங்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கட்டுமர மீனவர்களுக்கு நெத்திலி ரக மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடிதடைக் காலம் அமலில் உள்ளது. இதனால், சின்னமுட்டம் துறைமுக விசைப்படகு மீனவர்கள்
ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப் பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்வே துறை சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது வழித் தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 6 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன
சாந்தோம் நெடுஞ்சாலையில் ரஷ்யா நாட்டுக்கான தூதரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ட்ரோன் ஒன்று வட்டமடித்தது. இதைக்கண்டு ரஷ்யத் தூதரக அலுவலக பாதுகாப்புப் பணி
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்விரோதமே காரணம் என்றும் கொலைக்கு காரணமானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மக்களவை தேர்தலின் போது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 134-வது வார்டின், 13-வது வாக்குச் சாவடியில், முகவராக இருந்த பாஜக நிர்வாகி கவுதமனை, திமுகவினர் தாக்கியதாக தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றஞ்சாட்டியிருந்தார்
பத்திரப்பதிவு எண்ணிக்கை, வருவாய், தொலைவு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்தல், பிரித்தல் உள்ளிட்ட சீரமைப்புக்கான அடிப்படை பணிகளை பதிவுத்துறை தொடங்கியது
நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 5 பேர் பாதிக்கப்பட்டனர்
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுகவினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்றும், தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரேஷன் அரிசிக் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.
நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைபழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும் என்று பொது மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
விருத்தாசலத்தில் மது போதையில் சாலையின் குறுக்கே நின்றிருந்த இளைஞரை ஒதுங்கி நிற்குமாறு கூறிய நடத்துநரை சரமாரியாக தாக்கிய நபரைக் கண்டித்தும், காவல்துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில், எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் ஜுன் 7-ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் 30-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டில் 750-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார். 13 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மஞ்சு விரட்டைக் காண வந்த 70 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயிலும் விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு இயங்கும். மே 2-ம் தேதி முதல் இவைகள் இயக்கப்பட உள்ளன