நாம் உண்ணும் உணவு நம் உடலின் தசைகள் மற்றும் தோலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது மூளை மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க சமீபகாலமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நம் வயிற்றுக்குள் என்ன செல்கிறதோ அதன் நேரடி தொடர்பு நம் மூளையில் நடப்பதுடன் இருக்கிறது.
தி ஸ்ரீபெரும்புத்தூர் காவல் நிலையத்தில் ரௌடி விஸ்வா ஆஜரான போது அவரிடம் கையெழுத்து வாங்காமல் காவல்துறையினர் நிற்க வைத்திருந்த வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்கிறது.
"ஆட்டோ ஓட்டி எந்த அளவு சிரமங்களைச் சந்தித்து என்னை இந்த நிலைக்கு என் தந்தை உயர்த்தினார் என்பது தெரியும். அவரின் ஆசை நான் இந்திய அணியில் இடம் பெற்று சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்பதுதான்"
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியானது.
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் இன்று கூடும் நிலையில், அடுத்த நான்கு நாட்களில் பிரதமர் மோதி தலைமையிலான ஆளும் பாஜக அரசு கடைசி நேரத்தில் சில விஷயங்களை கட்டவிழ்த்து விட வாய்ப்புகள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கணிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அந்தக் கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லை என்றும் முன்பே அறிவித்திருந்தனர்.
நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோவுக்கு உதவியவர்கள் ஊதியம் கிடைக்காததால் டீ, இட்லி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 18 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கானவர்களின் குடும்பங்கள் பெரும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இது குறித்த களவிவரங்களைக் காண்போம்.
இப்போது எக்ஸ் என அறியப்படும் ட்விட்டர் அரசு விதிமுறைகளை மீறிச் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடக நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் என்ன நடந்தது?
ஷின்னை போலவே லியும் அதிபர் ஷி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. ஷின்னுக்கு பிறகு சமீபத்திய மாதங்களில் பொதுவெளியில் தென்படாமல் இருக்கும் இரண்டாவது அமைச்சராகவும் லி இருக்கிறார்.
தென் ஆப்ரிக்காவுடன் இதற்கு முன்பு 43 ரன்கள் எடுத்ததே இலங்கை அணியின் குறைந்த பட்ச ஸ்கோராகவுள்ளது. எனவே இது இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ரன்னாகும்.
ஒருசிலரின் வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதால் உரிமைத் தொகையில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏற்கனவே வாங்கிய கடனுக்காகவும் உரிமைத் தொகையை வங்கிகள் நேர் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ட்ரூடோவின் இந்தப் பயணம் ‘சிரமங்கள்’ நிறைந்தது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இந்தியாவில் அவர் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. மறுபுறம் கனடாவிலும் அவர் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
1659-ம் ஆண்டு சிவாஜி பயன்படுத்திய சிறிய ஆயுதம், லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நவம்பர் மாதம் கொண்டுவரப்படும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இரும்பினால் செய்யப்பட்ட பாக்-நாக், புலியின் கூர்மையான நகங்கள் கொண்ட பாதத்தின் வடிவம் கொண்டது. பீஜாப்பூர் சுல்தானகத்தின் ஜெனரல் அஃப்சல் கானைக் கொல்ல சிவாஜி இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார். இந்த ஆயுதம் தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சனாதனம் குறித்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடு முழுவதும் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. இந்த சனாதனம் தான் காந்தியை தீண்டாமைக்கு எதிராக நிறுத்தியதாக பிரதமர் மோதி பேசியுள்ளார். அது உண்மையா? வரலாறு கூறுவது என்ன?
பல்லாயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் சூழ்ந்திருக்க இலங்கையை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது அத்தனை எளிதல்ல. பந்துவீச்சில் துனித் வெல்லாலகே, அசலங்கா மிரட்டுகிறார்கள். பேட்டிங்கில் குசால் - சதீர இணை வலுவாக இருக்கிறது. இத்தகைய சூழலில் வெற்றியை வசப்படுத்த இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் வைணவ முறைப்படி பயிற்சி பெற்று அர்ச்சகர்களாகியுள்ள மூன்று பெண்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளனர். அவர்களது பின்னணி என்ன? எதிர்ப்புகளை கடந்து சாதித்தது எப்படி?
2023-ம் ஆண்டுக்கான வானியல் புகைப்படக் கலைஞர்கள் காட்சிப்படுத்திய சிறந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலத்திற்கு அடுத்ததாக இருக்கும் ஒரு பெரிய பிளாஸ்மா ஆர்க்கின் புகைப்படம் இந்த ஆண்டுக்கான பெருமதிப்புடைய வானியல் புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது.
நீலகிரி மலையில் உதகைக்கும், ஸ்காட்லாந்திற்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுத் தொடர்பை ஒரு மீன் வகை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆனால், அந்த மீன் குஞ்சுகள் வளர்க்க பயன்படுத்தப்பட்ட ஏரியை காணவில்லை என்றால் நம்பமுடிகிறதா?
அணு விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், பாகிஸ்தான் நாடு அணு ஆயுத பலத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தரையிலிருந்தும், கடலில் இருந்தும் தாக்கும் வகையிலான ஏவுகணைகளை பாகிஸ்தான் எங்கு தயாரிக்கிறது என்பது பற்றிய தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளது.
பிரம்மபுத்திராவின் குறுக்கே 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சீனா திட்டமிட்டுள்ள அணையின் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்? அதன் உயரம் என்ன? அணையின் சேமிப்புத் திறன் என்ன? அதனை சமாளிக்க இந்தியா என்ன செய்யப் போகிறது?
இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் முந்தைய காலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மூலம் அது அக்கட்சிக்கு தென்னிந்தியாவின் நுழைவாயில் ஆனது என்று அழைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்சியால் இம்முறை ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு வாக்கு வங்கியைப் பெறும் போட்டியில் முன்னேற முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
நான் வாழ்நாளுக்குமான அழுகையை சில ஆண்டுகளிலேயே அழுது முடித்தவள்... ஆனால் இப்போதெல்லாம் கண்ணீர் சுரப்பது நின்றுவிட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்வின் அனைத்து கடின நிலைகளையும் நான் கடந்து விட்டதாகவே உணர்கிறேன் என்கிறார் பார்கவி
பெங்களூருவில் மட்டுமே பிரதமர் மோதியின் பிரசாரத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவின் அரசியலை இப்போதைக்கு மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், இதை வைத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமெனச் சொல்ல முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். ராம்.
இந்த நினைவிடத்திற்காக ராஜஸ்தானிலிருந்து, பிரத்யேகமான வெள்ளை நிற பளிங்குக் கற்களை வரவழைக்கப்பட்டது. மேலும் கட்டட பணிகளை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. பிரத்யேகமான இந்த கட்டுமான பணிக்காக, ராஜஸ்தான், பிகார், ஹரியானா ஆகிய இடங்களிலிருந்து கலைஞர்களை வரவழைப்பட்டனர்.
கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் நமக்கு வழங்கப்பட்ட முக்கியமான அறிவுரை – ‘வீட்டில் இருங்கள்’ என்பதுதான். வீட்டில் சோஃபாவில் படுத்துக்கொண்டு, தொலைக்காட்சியோ நெட்ஃபிளிக்ஸ் தொடர்களோ பார்த்துக்கொண்டு நேரத்தைக் கடத்த நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு அது. ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை விரைவிலேயே உணர்ந்தோம்.
குட்டோவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிரானியோபார்ங்கியோமா என்ற அரியவகை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இது தீவிரமான மூளைக்கட்டி ஆகும். 10 லட்சம் பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து திரைத்துறையில் பலரும் நாயகிகளாக மிளிர்வதை இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த டிரெண்டை அன்றே தொடங்கி வைத்தவர். மிக குறுகிய காலத்திலேயே சினிமாவில் சிகரம் தொட்ட ஸ்மிதா பாட்டில் இளம் வயதிலேயே அகால மரணமடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்கும்போது பாஜக இருந்ததைவிட தற்போது வளர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது என்றும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றுள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வரும் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் பின்னணி, முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அளித்த விரிவான விளக்கம்...