அண்மையில் வெளியான ‘ஜோக்கர் 2’ ட்ரெய்கரில் இடம்பெறும் ஒரு காட்சி, கமலின் ஆளவந்தான் படத்தில் வரும் காட்சியை ஒத்திருப்பதாக கமல் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து பேசியுள்ள இயக்குநர் வெற்றிமாறன், அடுத்து ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
காதலுக்கு ஏங்கும் நாயகன், கனவைத் துரத்தும் நாயகிக்கான முரணை முன்வைத்து ஒரு காதல் நகைச்சுவைப் படம் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன்
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களின் கணக்குகளை முடக்க எர்ணாக்குளம் கீழமை நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சிராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“சினிமாட்டிக் யூனிவர்ஸை ‘சிங்கம் 3’ படத்தின் போதே யோசித்தேன். அப்போது முடியவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் அதனை திறம்பட செய்துகொண்டிருக்கிறார்” என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.
“ ‘மிருகம்’ (அனிமல்) என டைட்டில் வைத்த படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால் என் படத்தை பார்க்கும்போது அவருக்கு தொந்தரவாக உள்ளது என்கிறார்கள்” என நடிகர் சித்தார்த் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ்தள பக்கத்தில், ‘நாளை சம்பவம் உறுதி’ என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விஜய்யின் ‘தி கோட்’ பட முதல் சிங்கிள் புரோமோ வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியாகலாம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் முதல் சிங்கிள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆவேஷம்’, ‘வருஷங்களுக்கு சேஷம்’, ‘ஜெய் கணேஷ்’ ஆகிய மலையாள படங்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில், அதை எதையுமே பிவிஆர் சினிமாஸ் தனது திரையரங்குகளில் திரையிடவில்லை. அத்துடன் ஏற்கனவே திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த ‘ஆடுஜீவிதம்’ உள்ளிட்ட படங்களையும் நிறுத்தியுள்ளது. என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.
நடிகர் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாக்டர் பட்டத்தையொட்டி அவரது தந்தை சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிமுக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
“உங்களுடைய கரியரில் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி என எது வந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் நான் இத்தனை வருடங்களில் கற்றுக் கொண்டேன்” என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டரை தமிழ் புத்தாண்டையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கிறார் சூர்யா.
சின்ன சத்தம் கேட்டாலே தூக்கம் போய்விடும் அர்ஜுனுக்கும் (ஜி.வி.பிரகாஷ்), பலமாகக் குறட்டை விட்டபடி தூங்கும் தீபிகாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) திருமணம் நடக்கிறது. முதலிரவுக்குப் பின் மனைவியின் குறட்டைப் பிரச்சினையால் தூக்கம் தொலைக்கும் அர்ஜுன், ஒரு கட்டத்தில் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றம் செல்கிறார். குடும்பம், மனைவி, நண்பர்கள், இந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டனர், அர்ஜுன் எடுத்த முடிவு சரியா, இறுதியில் என்ன தீர்வு கிடைத்தது என்பது கதை.
‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கிய கமலக்கண்ணன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘குரங்கு பெடல்’. ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பிரபல மெக்ஸிகோ திரைப்பட இயக்குநர் அல்போன்சா குயூரான். ‘கிராவிட்டி’, ‘ரோமா’ படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர். சென்னை வந்திருந்த அவரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து விருந்து வைத்துள்ளார்.
ஏஆர் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிவகுமார், கோதை நாயகி தயாரிக்கும் படம், ‘சிற்பி’. இதில் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் அபாகஸ் கிராண்ட் மாஸ்டர் சரபேஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
அடிதடி, சண்டை என ‘பிஸி’யாக சென்றுகொண்டிருக்கும் ரவுடி ஒருவரின் வாழ்க்கையில் 3 மாணவர்களின் நுழைவு என்ன மாதிரியான ‘ஆவேஷ’த்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் ‘ஆவேஷம்’ (Aavesham) மலையாள படத்தின் ஒன்லைன்.
பரஸ்பரம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கில்,நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் வரும் அக்டோபர் 7-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.