புதுதில்லி: ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்திள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
270+ मौतों के बाद भी कोई जवाबदेही नहीं!मोदी सरकार इतनी दर्दनाक दुर्घटना की ज़िम्मेदारी लेने से भाग नहीं सकती। प्रधानमंत्री को फ़ौरन रेल मंत्री का इस्तीफा लेना चाहिए!— Rahul Gandhi (@RahulGandhi) June 4, 2023
இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகியும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, யாரிடமும் உரிய பதில் இல்லை. இத்தகைய மோசமான விபத்திற்கு பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது.
ரயில்வே அமைச்சர் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் பிரதமர் உடனடியாக ரயில்வே அமைச்சரை பதவி விலகச்சொல்ல வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 92 போட்டிகளில் விளையாடி 5712 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள், 28 அரைசதங்கள் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (109) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஸ்டோக்ஸ். மெக்குல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆனதும் இங்கிலாந்து அணி அசாத்தியமான சாதனை படைத்துள்ளது. 13 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!
அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதற்காக பயிற்சியில் ஏடுபட்டு வருகிறார் பென் ஸ்டோக்ஸ். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து சீக்கரமே கிளம்பி இங்கிலாந்து வந்துவிட்டார். தற்போது அளித்த பேட்டியில் ஸ்டோக்ஸ் கூறியதாவது:
நான் தவறான முறையில் கீழே விழுந்துவிட்டேன். எனது உடல் எடை முட்டியின் மீது குவிந்து விட்டது. அதிகமாக முட்டியை வளைத்துவிட்டேன். மேலும் எனக்கு 32 வயதாகிறது அதனால்கூட இப்படி ஆகியிருக்கலாம். நான் இன்று காலையில் பந்து வீசினேன். ஐபிஎல்க்கு பிறகு முதன்முறையாக பந்து வீசுகிறேன். பந்த்ய் வீசுவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எந்தப் பிரச்னைகளுமில்லை.
டப்ஸ்மாஷ், டிக்டோக், ரீல்ஸ்களில் பிரபலமானவர் மிர்ணாளினி. பின்னர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடனம் வைரலானது. பின்னர் விஷாலின் எனிமி படத்திலும் அவர் ஆடிய நடனம் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது.
எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாம்பியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் மிர்ணாளினி. இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள மிர்ணாளினி ரவி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். புதிய புகைப்படமொன்றுக்கு ரசிகர் ஒருவர் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் நாயகி மிச்செல் ரோட்ரிக்வெஸ் போலவே இருக்கிறார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.
இந்த புதிய புகைப்படங்களுக்கு பலரும் இதய எமோஜிக்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு வருகின்றனர்.
கர்நாடகத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் மற்ற மாநிலங்களின் தேர்தல்களிலும் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மட்டுமின்றி மக்களும் பாஜகவின் வெறுப்பு கலந்த சித்தாந்தத்தை வெறுத்து அவர்களை தோற்கடிக்க தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். வாஷிங்டன் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் வந்தடைந்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை மாற்றிய ஐபிஎல்: பாட் கம்மின்ஸ்
இது குறித்து அவர் பேசியதாவது: நாங்கள் கர்நாடகத்தில் பாஜகவை அழிக்க முடியும் என காட்டியுள்ளோம். நாங்கள் பாஜகவை தோற்கடிக்கவில்லை, அழித்துள்ளோம். கர்நாடகத்தில் அவர்களை நாங்கள் நீக்கிவிட்டோம். பாஜகவிடம் ஒட்டுமொத்த ஊடகமும் இருந்தது. எங்களிடம் இருந்த பணத்தைக் காட்டிலும் பாஜவிடம் 10 மடங்கு அதிகமாக இருந்தது. அவர்களிடம் அரசாங்கமும் இருந்தது. அவர்களிடம் விசாரணை அமைப்புகளும் இருந்தன. அவர்களிடம் எல்லாமும் இருந்தன. இருந்தும் அவர்களை நாங்கள் அழித்துவிட்டோம். நான் உங்களுக்கு ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். அடுத்து தெலங்கானா தேர்தலில் அவர்களை நாங்கள் அழிக்க உள்ளோம். இந்த தேர்தலுக்குப் பிறகு தெலங்கானாவில் பாஜகவை பார்ப்பது மிகவும் கடினம்.
தெலங்கானா மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களிலும் பாஜகவை வீழ்த்துவோம். கர்நாடகத்தின் முடிவுகளைப் போலவே இந்த மாநிலங்களின் முடிவுகளும் இருக்கும். காங்கிரஸ் மட்டும் பாஜகவை தோற்கடிக்கப் போவதில்லை. இந்திய மக்கள் , மத்தியப் பிரதேச மக்கள், தெலங்கானா மக்கள், ராஜஸ்தான் மக்கள் மற்றும் சத்தீஸ்கர் மக்கள் பாஜகவினை தோற்கடிக்கப் போகிறார்கள். பாஜகவின் வெறுப்புணர்வு மிகுந்த கொள்கைகளை மக்கள் புரிந்து கொண்டனர்.
இதையும் படிக்க: எஸ்.ஜே.சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவினை வீழ்த்துவோம். இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். ஒரு புறம் பாஜவின் வெறுப்புணர்வு நிரம்பிய சித்தாந்தமும், மறுபுறம் காங்கிரஸின் அன்பு நிரம்பிய சித்தாந்தமும் உள்ளன என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மகிந்த ராஜபட்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக தொடக்கத்தைத் தந்தது. பதும் நிசங்கா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், குஷல் மெண்டிஸ் களமிறங்கினார். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணியின் ஸ்கோர் அதிகரித்தது. சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரத்னே மற்றும் குஷல் மெண்டிஸ் அரைசதம் கடந்தனர். கருணாரத்னே 52 ரன்களிலும், குஷல் மெண்டிஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சதீரா (44 ரன்கள்), அசலங்கா (6 ரன்கள்), தாசுன் ஷானகா (23 ரன்கள்) மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ( 29 ரன்கள்) குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரீத் அகமது மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவிடம் கற்றுக் கொண்டதை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செயல்படுத்துவேன்: கேமரூன் கிரீன்
50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் பிரபல மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி. தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் முத்திரை பதித்து ஆச்சர்யப்படுத்தியவர். 2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டு பின்னர் இதய நோயினால் உயிரிழந்தார். இருப்பினும் அவரது பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களின் மனதில் சாகாவரம் கொண்டு வாழ்கிறது.
இன்று எஸ்பிபி பிறந்தநாளினை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
தனித்துவமான இயக்குநராக இருந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வதந்தி இணையத் தொடர் நல்ல வரவேற்பினை பெற்றது.
எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பொம்மை. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!
இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகியது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
பொம்மை திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16 ஆம் தேதி பொம்மை படம் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் 68வது படத்தினை இயக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு பொம்மை படத்தின் 2வது டிரைலரை வெளியிட்டுள்ளார்.
Happy to release the second trailer of #Bommai https://t.co/lqdNyoXWSc Congrats to @Radhamohan_Dir Saar, young Maestro @thisisysr thambi , my favorite @iam_SJSuryah saar & team! Do watch #Bommai on June 16th in theatres!
— venkat prabhu (@vp_offl) June 4, 2023
ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகள் குறித்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று காலை முதலே விபத்து நடந்த பாலசோர் பகுதியில் நேரில் முகாமிட்டு மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர்.
இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாலசோர் பகுதியில் காலை முதலே சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடைபெற்ற இடத்தை நேற்று பார்வையிட்டார். சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிகளை இன்று முழுவதுமாக முடிப்போம். ரயில் விபத்தில் சிக்கிய உடல்கள் அனைத்தும் இங்கிருந்து மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடித்து வரும் புதன்கிழமைக்குள் ரயில் சேவையை இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
இந்தியாவில் புதிதாக 202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,343 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,880 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் 0.01 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவிகிதம் 98.81 ஆக உள்ளது. இதுவரை 220.66 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் செலுத்திய ஆதிக்கத்தை ஐபிஎல் முடுவுக்கு கொண்டுவந்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் இருந்து அவர்களது நாட்டுக்காக விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வைப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது எனவும் தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7 முதல் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவிடம் கற்றுக் கொண்டதை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செயல்படுத்துவேன்: கேமரூன் கிரீன்
இது குறித்து அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போது இல்லை. அந்த நிலையை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஐபிஎல் மாற்றிவிட்டது. ஆனால், நாம் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடுவதை மற்ற போட்டிகளைக் காட்டிலும் பெரிதாக நினைக்க வேண்டும். ஏனென்றால், அது அவர்கள் நாட்டுக்கு செய்யும் கடமையாகும். ஆஸ்திரேலியாவுக்காக வீரர்கள் அதிக அளவில் விளையாடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், அது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. நாம் இது குறித்து ஆழமாக யோசிக்க வேண்டும்.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
நாட்டுக்காக விளையாடுவதைத் தவிர மற்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களை நாம் குறை கூற முடியாது. ஒரு நாள் வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதுதான் எதார்த்தம். மற்ற விளையாட்டுகளிலும் இதனைக் காண முடியும். அப்படி விடுவிக்கப்படும் வீரர்களை அதிகமாக ஆஸ்திரேலியாவுக்காக ஆட வைக்க வேண்டும். உலகக் கோப்பை மற்றும் பல முக்கியத் தொடர்களில் வெற்றியை பெற்றுத் தருவதற்கான சிறந்த வீரர்களுக்கான தேவை நமக்கு இருக்கிறது என்றார்.
சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஐபிஎல்லில் 2021இல் 635 ரன்களும், 2022இல் 368 ரன்களும், 2023இல் 590 ரன்களும் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தற்போது தனது காதலியான உட்கர்ஷா பவாரை திருமணம் முடித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். திருமணம் இருப்பதால் ஜெய்ஸ்வால் தேர்வானார். ஆனால் இன்னும் சில நாள்களில் ருதுராஜ் இங்கிலாந்து செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருதுராஜ் காதலியும் மனைவியுமான உட்கர்ஷா பவார்:
11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடும் உட்கர்ஷா மகாராஷ்டிரம் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். மகளிர் ஐபிஎல்லில் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. ஆனால் நல்ல ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புணேவில் உடல்நலம் ஊட்டசத்து குறித்த பிட்னஸ் பாடப்பிரிவில் படித்து வருகிறார். சிஎஸ்கே இறுதிப் ப முடிந்தப் பிறகு முக்கியமான நபர்கள் என ருதுராஜ் தோனியுடன் உட்க்ர்ஷா புகைப்படத்தினையும் பகிர்ந்திருந்தார். அப்போதுதான் உட்கர்ஷா வைரலானார்.
இந்நிலையில் ஜூன் 3இல் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ருதுராஜ் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனித்துவமான இயக்குநராக இருந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வதந்தி இணையத் தொடர் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தில் சிறிய கதாபாத்திரம் செய்திருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படத்திலும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரசாந்த் நீல் பிறந்தநாள்: விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு!
ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.ரசிகர்களை பாராட்டி உடனுக்குடன் ரிப்ளை செய்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
View this post on Instagram
A post shared by SJ Suryah (@iam__sjsuryah)
சமீபத்தில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் ரீஸ்ஸ், புகைப்படங்களுக்கென ப்ரத்யேகமான அப்ளிகேஷனாகும்.
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது
படிக்க | 200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்தது.
விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர். இதில் 290 பேர் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும், சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
படிக்க | ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 7 பேரைக் காணவில்லை
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
www.srcodisha.nic.in, bmc.gov.in, osdma.org ஆகிய இணையதளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோஹித் சர்மாவின் அமைதியாக செயல்படும் திறனை தன்னுடைய ஆட்டத்தில் கொண்டுவர முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் நடைபெறவுள்ள நிலையில் ஐசிசிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்ட மகள்!
ஐசிசிக்கு கேமரூன் கிரீன் அளித்த பேட்டியில் கூறியதாவது: போட்டி நடைபெறும்போது ரோஹித் சர்மாவிடம் உள்ள அமைதி நம்மை ஆச்சர்யமடைய வைக்கும். இதனை அவர் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். அவருடன் இணைந்து விளையாடியது சிறப்பான அனுபவமாக இருந்தது. மும்பை அணிக்காக விளையாடும்போது என்னுடைய வேலை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே ஆகும். அதனையே நான் செயல்படுத்தினேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி மிகப் பெரிய ஆபத்தாக இருக்கப்போவதாக நான் நம்புகிறேன். அவர் எப்போதும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துபவர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முக்கியமான போட்டியாகும். அதற்காக நான் காத்திருக்கிறேன். டி20 போட்டியிலிருந்து டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு எனது பேட்டிங்கை மாற்றிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கப் போவது கிடையாது. டெஸ்ட் போட்டியினைப் போன்று சிறப்பான ஆட்டம் கிடையாது என்றார்.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடிய கிரீன் 452 ரன்கள் குவித்தார். மேலும், மும்பை அணிக்காக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருடைய சிறப்பான பேட்டிங் அணிக்கு பலமாக அமைந்தது.
இதையும் படிக்க: ஒடிசா விபத்துக்கான காரணம் தெரிந்தது! ஜூன் 6 முதல் மீண்டும் ரயில் சேவை!!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவலில் வருகிற ஜூன் 7 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில் படக்குழு விடியோவை வெளியிட்டு இயக்குநர் பிரசாந்த் நீல்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் பிரபாஸும், “டார்லிங் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து” என தெரிவித்துள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Warmest birthday wishes to the incredibly talented director #PrashanthNeel.
From the sets of @SalaarTheSaga #HBDPrashanthNeel #Prabhas #Salaar
pic.twitter.com/TF3B1cuPMj
— Hombale Films (@hombalefilms) June 4, 2023
ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
இறந்த 290 பேரில் கிட்டத்தட்ட 70 - 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர்.
மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பாலசோரில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஒடிசா சென்றுள்ள தமிழக குழு தெரிவித்துள்ளது.
கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
படிக்க | 200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர்.
இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் உயிரிழப்பில்லை: மா.சுப்ரமணியன் பேட்டி
சென்னை செல்லவிருந்த கோரமண்டல் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பயணித்துள்ளனர். அவர்கள் குறித்து தகவல் அறிந்து உதவ தமிழகத்திலிருந்து அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா விரைந்தது.
அதன்படி, கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 294 பேர் தனி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களில் 7 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் தண்டவாளம் சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரயில் விபத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் புதன்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
பாலாசோர் மாவட்டத்திலுள்ள பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 290 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. ரயில் பெட்டிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளன. 7 பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து மீட்பு ரயில், 4 ரயில்வே கிரேன்கள் ஆகியவைகொண்டு சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பணிகள் முடிந்த பின்னர், வரும் புதன்கிழமை முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்து காரணமாக தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் 95 ரயில்களின் பயணம் இன்று (ஜூன் 4) ரத்து செய்யப்பட்டுள்ளது.
95 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 45 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்திலுள்ள பஜாா் ரயில் நிலையம் மூன்று ரயில்கள் ஜூன் 2ஆம் தேதி ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது.
ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும், பெங்களூரு-ஹெளரால் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 290-ஆக அதிகரித்துள்ளது.
பாலாசோர் வழித்தடத்தில் ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள், 7 பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து மீட்பு ரயில், 4 ரயில்வே கிரேன்கள் ஆகியவைகொண்டு சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிகள் காரணமாக தென்கிழக்கு பிராந்தியத்தில் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 45 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலாசோரில் விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் வரும் புதன்கிழமை ஜூன் 6ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாள சீரமைப்புப் பணிகளை மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடைபெற்ற இடத்தை நேற்று பார்வையிட்டார். சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
படிக்க | ஒடிசா விபத்து: 95 ரயில்கள் ரத்து; மாற்று வழியில் 45 ரயில்கள்!
சீரமைப்புப் பணிகளை இன்று முழுவதுமாக முடிப்போம். ரயில் விபத்தில் சிக்கிய உடல்கள் அனைத்தும் இங்கிருந்து மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடித்து வரும் புதன்கிழமைக்குள் ரயில் சேவையை இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
விபத்துகான காரணம்
சிக்னலுக்கான மின்னணு அமைப்பில் (மின்னணு இன்டர்லாக்) மாற்றம் ஏற்பட்டதால், விபத்து ஏற்பட்டதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு தண்டவாளத்தை மாற்று வழித்தடத்துக்காக மற்றொரு தண்டவாளத்துடன் இணைப்பதற்கான பணியை செய்ய மின்னணு இன்டர்லாக் பயன்படுத்தப்படுகிறது. முன்பு மனித ஆற்றல் மூலம் இப்பணி செய்யப்பட்டு வந்தது. தற்போது தானியங்கி முறையில் நடைபெறுகிறது.
3 ரயில்கள் மோதி விபத்து
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
படிக்க | ஒடிசா ரயில் விபத்து: தண்டவாள சீரமைப்புப் பணிகள் தீவிரம்
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதிய்து. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 290 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 290-ஆக அதிகரித்துள்ளது.
800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதிய்து. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 290 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றூக்கும் அதிகமான மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகலாக மருத்துவ உதவி அளித்து வருகின்றனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உதவி வருகின்றனர்.
மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளை தன்னார்வ அமைப்புகள் வழங்கிவருகின்றன.
ஆசிய ஜூனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 22-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்தியா.
ஜப்பானின் ககாமிக்ஹரா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையே தொடக்க ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி எதிரணிக்கு கோல் போட வாய்ப்பே தரவில்லை.
டபுள் ஹாட்ரிக்:
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அன்னு டபுள் ஹாட்ரிக் கோலடித்தாா். அன்னு (13, 29, 30, 38, 43, 51), வைஷ்ணவி விட்டல் (3, 56), மும்தாஸ் கான் (6, 44, 47, 60), சுனிலிடா டாப்போ (17, 17), மஞ்சு சோரிஸ்யா (26), தீபிகா சோரங் (18, 25), தீபிகா (32, 44, 46, 57), நீலம் (47) நிமிஷங்களில் கோலடித்தனா்.
கடைசி குவாா்ட்டரில் இந்திய அணி 7 கோல்களை அடித்தது. 5-ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதுகிறது இந்தியா.
இந்திய சா்ஃபிங் ஓபன் போட்டியில் ஆடவா் பிரிவில் தமிழகத்தின் கிஷோா் குமாரும், மகளிா் பிரிவில் கமலி மூா்த்தியும் இரட்டை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிச் சுற்றாக கா்நாடக மாநிலம் மங்களூரு சஷித்திலு கடற்கரையில் இந்திய சா்ஃபிங் ஓபன் போட்டிகள் ஜூன் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றன. போட்டியின் இறுதி நாளான சனிக்கிழமை ஆடவா், மகளிா் ஓபன், 16 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆடவா் ஓபனில் தமிழக வீரா் கிஷோா் குமாா் முதலிடத்துடன் ரூ.50,000 ரொக்கப் பரிசை வென்றாா். ஸ்ரீ காந்த், பி. சூா்யமா அடுத்த இடங்களைக் கைப்பற்றினா்.
மகளிா் பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி முதலிடத்துடன் ரூ.30,000 ரொக்கம் வென்றாா். சுகா், சின்சனா அடுத்த இடங்களைக் கைப்பற்றினா்.
16 வயது ஆடவா் பிரிவில் கிஷோா் குமாா், தயின் அருண், பி. ஹரிஷ் ஆகியோரும், மகளிா் பிரிவில் கமலி, தனிஷ்கா, சான்வி ஆகியோா் முதல் மூன்று இடங்களை வென்றனா்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னணி வீரா்கள் ஜோகோவிச், அல்காரஸ், ஹோல்கா் ருனே, கேஸ்பா் ரூட், மகளிா் பிரிவில் எலினா விட்டோலினா, ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சபலென்கா, கௌஃப் ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
டென்னிஸ் சீசனின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்ச் ஓபன் பாரீஸில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் மூன்றாவது சுற்று ஆட்டங்களில் உலகின் நம்பா் 1 வீரா் நோவக் ஜோகோவிச் 7-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் 29-ஆம் நிலை வீரா் டேவிடோவிச் போகினாவுடன் போராடி வென்றாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம், 36 நிமிஷங்கள் நீடித்தது.
இரண்டாம் நிலை வீரா் காா்லோஸ் அல்காரஸ் 6-1, 6-4, 6-2 என கனடா வீரா் டெனிஸ் ஷபவலோவையும், ஜுவன் வாரிலாஸ் 3-6, 6-3, 7-6, 4-6, 6-2 என்ற 5 செட் த்ரில்லரில் ஹியுபா்ட் ஹா்காஸை வீழ்த்தினா்.
இத்தாலியின் லோரென்ஸோ சோனேகோ 5-7, 0-6, 6-3, 7-6, 6-3 என்ற 5 செட் கணக்கில் ஆன்ட்ரெ ருப்லேவை 3.4 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் வீழ்த்தினாா்.
நாா்வே வீரா் கேஸ்பா் ரூட் 4-6,. 6-4, 6-1, 6-4 என சீனாவின் ஸாங் ஸிஹிஹென்னை வீழ்த்தினாா். ஜப்பான் வீரா் யோஷிடோ நிஷியோகா 3-6, 7-6, 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் குவாலிஃபையா் தியாகோ சைபோத்தை வென்றாா். டென்மாா்க் வீரா் ஹோல்கா் ருனே 6-4, 6-1, 6-3 என ஆா்ஜென்டீனாவின் அல்பல்டோ ஒலிவியரியை வென்றாா். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிா்நோக்கியுள்ள கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸ் 6-2, 6-2, 6-3 என டீகோ ஸ்வாா்ட்ஸ்மேனை வீழ்த்தினாா்.
மகளிா் பிரிவில் ஜெஸிக்கா பெகுலா 1-6, 3-6 என்ற நோ் செட்களில் பெல்ஜியத்தின் எல்ஸி மொ்ட்டன்ஸிடம் தோற்றாா். அா்யனா சபலென்கா 6-2, 6-2 என ராகிமோவாவை வீழ்த்தினாா். ரஷியாவின் டேரியா கஸட்கினா 6-0, 6-1 என ஸ்டீரின்ஸையும், உக்ரைனின் விட்டோலினா 2-6, 6-2, 7-5 என அன்னா பிளின்கோவாவையும், கோகோ கௌஃப்-ஆன்ட்ரீவாவை 6-7, 6-1, 6-1 என வென்று நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
ரைபகினா விலகல்:
உடல்நல பாதிப்பு காரணமாக உலகின் நான்காம் நிலை வீராங்கனையும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான எலனா ரைபகினா விலகுவதாக அறிவித்துள்ளாா்.
நடாலுக்கு இடுப்பு அறுவை சிகிச்சை:
22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ரபேல் நடாலுக்கு சிக்கலான இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி ஆஸி. ஓபன் போட்டியில் காயமடைந்த நடால் அதுமுதலே ஆடவில்லை. மேலும் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் உள்பட இந்த சீசன் முழுவதும் அவா் ஆட மாட்டாா் எனத் தெரிகிறது. மேலும் 2024 சீசன் தனது கடைசி சீசனாக இருக்கும் எனக் கூறியுள்ளாா் நடால்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி கோப்பை வெல்லும் இந்தியாவின் கனவு நனவாகுமா என ரசிகா்கள் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளனா்.
கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் குறுகிய ஓவா் ஆட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும், டெஸ்ட் ஆட்டங்களுக்கு தனி மதிப்பு தொடா்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் ஆட்டங்கள் பொலிவு இழந்த நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி அறிமுகம் செய்தது. முதல் சாம்பியன் பட்டத்தை நியூஸிலாந்து கைப்பற்றியது.
கடந்த ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் தொடா் ஆட்டங்கள் களை கட்டியது. உலகில் கிரிக்கெட் ரசிகா்கள் கவனம் முழுவதும் அதில் இருந்த நிலையில், சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
டபிள்யுடிசி இறுதி ஆட்டம்:
இதற்கிடையே, 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன. லண்டனின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. ரோஹித் சா்மா தலைமையில் இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.
இந்தியா-ஆஸி. மோதல்:
கடந்த 2 ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற ஆஸி, இந்திய அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. டபிள்யுடிசியில் 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா, 66.67 புள்ளியுடன் ஆஸி.யும், 10 வெற்றி, 5 தோல்வி, 3 டிரா, 58.8 புள்ளியுடன் இந்தியாவுடம் தகுதி பெற்றன.
இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் என்ற பட்டத்தை வெல்லும்.
வாய்ப்பை இழந்த இந்தியா:
கடந்த 2021-ஆம் ஆண்டு சௌதாம்ப்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம், ஆஸ்திரேலியா அணியும் முதல் முறையாக இந்த பட்டத்தை வெல்ல காத்துள்ளது. இரு அணிகளுமே இதற்காக லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
உற்சாகத்தில் இந்தியா:
கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதத்தில் நடைபெற்ற பாா்டா்-கவாஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் 2-1என கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது இந்தியா. பேஸா்கள், பேட்டா்கள், ஸ்பின்னா்கள் என அனைத்திலும் இந்திய அணி சீரான நிலையில் உள்ளது. கூடுதலாக முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபாா்முக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நட்சத்திரங்கள் பும்ரா, ரிஷப் பந்த், ராகுல், ஷிரேயஸ் ஐயா் இல்லாதது பாதகமாக உள்ளது.
எனினும் ரோஹித், கோலி, புஜாரா, ரஹானே, ஜடேஜா ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்ப்பா், பௌலிங்கில் உமேஷ் யாதவ், சா்துல் தாகுா், ஜடேஜா, அக்ஸா் படேல், ஷமி, சிராஜ், அஸ்வின் ஆகியோா் சிறப்பாக செயல்படுவா் என எதிா்பாா்க்கலாம்.
பலம் வாய்ந்த ஆஸி. பௌலிங்:
அதே வேளையில் ஆஸி. அணியில் வேகப்பந்து வீச்சு அற்புதமாக உள்ளது. இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலை, ஆஸி.யுடன் ஒத்துப்போகும் நிலையில், பேஸா்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வா்.
பேட்டிங்கில் வாா்னா் சமீபத்தில் சோபிக்கவில்லை. டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், ஆகியோா் பலம் சோ்ப்பா்.
பௌலிங்கில் பேட் கம்மின்ஸ், ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸல்வுட், நாதன் லயன் ஆகியோா் இருப்பது பலமாக உள்ளது.
ரூ.13 கோடி பரிசு:
பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.19 கோடியும், ரன்னா் அணிக்கு ரூ.6.5 கோடியும் ரொக்கப் பரிசாக தரப்படுகிறது.
ஓவலில் இரு அணிகள்:
இந்தியா: மொத்த ஆட்டங்கள் 38, வெற்றி 7, தோல்வி 17, டிரா 14, ஆஸ்திரேலியா: மொத்த ஆட்டங்கள் 14, வெற்றி 2, தோல்வி 5, டிரா 7.
பா.சுஜித்குமாா்-
-
ஆா்எஸ்எஸ் அவதூறு வழக்கில், அந்த அமைப்பு மீது குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் காணொலி அடங்கிய டிவிடி மகாராஷ்டிர நீதிமன்றத்தில் சனிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் பிவண்டியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆா்எஸ்எஸ் இருந்தது’ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவரின் பேச்சு ஆா்எஸ்எஸ்ஸின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகத் தெரிவித்து, பிவண்டியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ராகுல் மீது ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த ராஜேஷ் குண்டே என்பவா் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளாா்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குன்டேயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பிரசாரத்தின்போது ராகுல் பேசிய காணொலி அடங்கிய டிவிடியை நீதிமன்றத்தில் குன்டே சமா்ப்பித்தாா். வழக்கு தொடா்பான ஆதாரமாக புதிதாக 7 ஆவணங்களை குண்டேயின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் வழங்கினாா். ஜூலை 1-ஆம் தேதி குண்டேயிடம் விசாரணை தொடர உள்ளது.
பஞ்சாபின் இரண்டு மாவட்டங்களில் 14.89 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவா் கைது செய்யப்பட்டனா். அதில் 5.5 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் இந்திய எல்லைக்குள் வீசப்பட்டதாகும்.
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் அருகில் அமைந்துள்ள ராய் எல்லை கிராமத்தில் போலீஸாருடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது, சனிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஓா் ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வானில் வட்டமிடுவதை வீரா்கள் கண்டறிந்தனா். ஆனால், இருளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கொண்ட பையை இந்திய எல்லைக்குள் வீசிவிட்டு, பாகிஸ்தானுக்குள் மீண்டும் சென்று அந்த ஆளில்லா விமானம் மறைந்தது.
இதைத் தொடா்ந்து, அக்கிராமத்தைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் வீரா்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, பாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானம் மூலம் இந்திய எல்லைக்குள் வீசப்பட்ட பையிலிருந்த 5.5 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டது. கொக்கியுடன் கூடிய இரும்பு வளையமும் அந்த பையில் இணைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
9 கிலோ போதைப்பொருளுடன் இருவா் கைது: ஃபசில்கா மாவட்டத்தில் 9.39 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்த இருவரை காவல் துறை கைது செய்தது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவா் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று அந்த மாநில டிஜிபி கெளரவ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டாா்.
ஒடிஸா ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவமும் விமானப் படையும் ஈடுபட்டுள்ளன.
ராணுவத்தின் மருத்துவக் குழு, பொறியியல் குழுவினா் ஆம்புலன்ஸ்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விமானப் படையின் இரு மிக்17 எஸ் ஹெலிகாப்டா்கள் மூலம் காயமடைந்தவா்கள் உடனுக்குடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேற்கு வங்கத்தின் பாரக்பூா், பனகாரில் உள்ள ராணுவ முகாம்களில் இருந்து இந்தக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
முதலில் களமிறங்கிய உள்ளூா் இளைஞா்கள்
ரயில் விபத்து நிகழ்ந்தபோது அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள்தான் முதலில் மீடப்புப் பணியில் ஈடுபட்டனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், இரவு 7 மணியிளவில் பகாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே டீக்கடையில் நண்பா்கள் அனைவரும் கூடியிருந்தோம். அப்போது, ரயில் தண்டவாளம் இருந்த திசையில் திடீரென பலத்த ஓசை கேட்டது. தொடா்ந்து மக்களின் கூக்குரல் கேட்டது. இதையடுத்து அந்த திசையை நோக்கி ஓடினோம். அப்போது ரயில்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. உடனடியாக, காவல் துறைக்கும், ரயில்வேக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, நண்பா்கள் அனைவரும் முடிந்த அளவுக்கு காயமடைந்தவா்களை மீட்க முயற்சித்தோம்.
எங்கள் இரு சக்கர வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். லேசாக காயமடைந்தவா்களில் சிலா் அந்த இருட்டுக்குள் தங்கள் உறவினா்களைத் தேடி அலைந்தது சோகமான நிகழ்வாக இருந்தது. சுமாா் 50 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
ரத்ததானம் செய்ய குவிந்த பொதுமக்கள்
ரயில் விபத்தில் காயமடைந்தவா்கள் பலா் அருகில் இருந்த பாலசோா் மாவட்ட மருத்துவனையிலும், சோரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனால் அந்த மருத்துவமனை முழுவதும் காயமடைந்தவா்களால் நிரம்பி வழிந்தது.
படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், லேசாக காயமடைந்த பலா் தரையில் படுக்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் பிற இடத்தில் இருந்து கூடுதல் படுக்கைகளும் மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன.
காயமடைந்தவா்களின் வேதனைக் குரல் மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவா்கள் பலரது உடல் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
விபத்தில் காயமடைந்தவா்கள் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால் மொழி தெரியாததால் அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் இருந்தது. பாலசோா் மாவட்ட மருத்துவமனையில் மட்டும் சுமாா் 600 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காயமடைந்தவா்களுக்கு உதவுவதற்காக உள்ளூா் இளைஞா்களும் பொதுமக்களும் இரவு நேரத்திலேயே ரத்ததானம் செய்ய குவிந்தனா். பாலசோா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 2,000 போ் ரத்ததானம் செய்தனா்.
‘ஒடிஸா ரயில் விபத்துக்கு காரணமானவா்களாகக் கண்டறியப்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி கோர விபத்துக்கு உள்ளான ஒடிஸா மாநிலம் பாலசோா் மாவட்டம் பஹாநகா் பகுதிக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தத் துயர சம்பவத்தின் வேதனையை விவரிக்க வாா்த்தைகள் இல்லை. இந்த வலியிலிருந்து மீண்டு வர இறைவன் நமக்கு பலத்தைத் தரவேண்டும்.
விபத்தில் காயமடைந்தவா்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். விபத்து மீட்புப் பணியில் இரவு முழுவதும் உதவிய உள்ளூா் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கோர விபத்தை அரசு மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. முறையான, விரைவான விசாரணையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். விபத்துக்கு காரணமானவா்களாக கண்டறியப்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றாா்.
இந்த ஆய்வின்போது பிரதமருடன் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் உடனிருந்தனா்.
ரயில் விபத்து மற்றும் மீட்புப் பணி நிலவரம் குறித்து பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் பிரதமருக்கு விவரித்தனா்.
விபத்து நடந்த பகுதியில் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமா், ஒடிஸா வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் பிரமிளா மாலிக் மற்றும் உள்ளூா் காவல்துறை அதிகாரியிடமும் ஆலோசனை நடத்தினாா்.
விபத்து நடந்த பகுதியிலிருந்தபடி, மத்திய அமைச்சரவைச் செயலா் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஆகியோரை கைப்பேசி மூலம் பிரதமா் தொடா்புகொண்டு, ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அறிவுறுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்து நடந்த பகுதியைப் பாா்வையிட்ட பின்னா் பாலசோா் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் ரயில் விபத்தில் காயமடைந்தவா்களிடம் பிரதமா் மோடி நலம் விசாரித்தாா். தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என அவா்களிடம் பிரதமா் உறுதியளித்தாா். அங்கிருந்த மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களிடமும் பிரதமா் கலந்துரையாடினாா்.
ஒடிஸா பயணத்துக்கு முன்பாக, ரயில் விபத்து குறித்து தில்லியில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தை பிரதமா் நடத்தினாா்.
விபத்துகளைத் தடுப்பதற்காக, ரயில் வழித்தடங்களில் ‘கவச்’ எனும் அதிநவீன தானியங்கி தொழில்நுட்ப அமைப்பை நிறுவும் நடைமுறையை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
ஆனால், ஒடிஸாவில் ரயில் விபத்து நேரிட்ட வழித்தடத்தில் இந்த அமைப்புமுறை இல்லை என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கவச்’ என்றால் என்ன?:
ரயில்களின் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி தொழில்நுட்ப அமைப்புமுறையே ‘கவச்’ ஆகும்.
ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு (ஆா்டிஎஸ்ஓ), இதர 3 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்த அமைப்புமுறையை உருவாக்கியது. ஒடிஸா ரயில் விபத்துக்குப் பின், இந்த தொழில்நுட்பத்தின் தேவை அதிக கவனம் பெற்றுள்ளது.
எப்படி பாதுகாக்கும்?:
ரயிலின் ஓட்டுநா், சிக்னலை மீறிச் செல்வதே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. அவ்வாறு, ரயிலின் ஓட்டுநா் சிக்னலை மீறிச் சென்றால், ‘கவச்’ தொழில்நுட்பம் எச்சரிக்கை செய்யும். அதிவேகமாக ரயிலை இயக்கினாலும் எச்சரிக்கை செய்யும். அடா் பனிமூட்டம் போன்ற மோசமான வானிலைகளின்போது, ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்துக்கு உதவும்.
ரயிலை தானாக நிறுத்தும்:
ஒரே தண்டவாளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இரு ரயில்கள் எதிரெதிா் திசையில் வரும் பட்சத்தில், ‘கவச்’ தொழில்நுட்பம் ரயிலின் ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்யும். அவா் பிரேக் இயக்கத் தவறினால், பிரேக் அமைப்புமுறையை தானே ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ரயிலை நிறுத்திவிடும்.
தென் மத்திய ரயில்வேயில் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பீதா் ஆகிய வழித்தடங்களில் கவச் தொழில்நுட்பத்தின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இதர ரயில் வழித்தடங்களிலும் இந்த அமைப்புமுறையை நிறுவும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள் தில்லி-ஹெளரா, தில்லி-மும்பை வழித்தடங்களில் இதை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், கவச் தொழில்நுட்பப் பயன்பாடு விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.