2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி பலருக்கும் மறக்க வேண்டியதாயிற்று. ஆனால் கம்மின்ஸ் தலைமை ஆஸ்திரேலிய அணிக்கு அன்றைய தினம் எதிர்பாராத உற்சாக தினம், உலக சாம்பியன்கள் தினமாக மாறியது. அதாவது ஒரு லட்சத்து 15 ஆயிரம் அகமதாபாத் ரசிகர்களை வாயடைக்கச் செய்வேன் என்றார் கம்மின்ஸ், சொன்னார் செய்தார்.
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தன்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிரீத்தி ஜிந்தா முயற்சி செய்கிறார் என்று அடிப்படையற்ற போலி செய்திகளை, வதந்திகளைப் பரப்புகின்றனர் என்று பிரீத்தி ஜிந்தா காட்டமாக மறுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அபாரமாக பேட் செய்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிக்கலாகவே அமைந்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றதன் காரணமாக ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி அதனை விரைவாக எட்டி இருந்தது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் மான்யூவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 4-11, 9-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த டேவன் கான்வே காயம் காரணமாக அந்த அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசனை சிஎஸ்கே அணி சேர்த்துள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை 192 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதே நாளில் (ஏப்.18) கடந்த 2008-ல் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டின் ஐபிஎல் ஆட்டம் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் மெக்கல்லம் ஆடிய அதிரடி ஆட்டத்தின் காரணமாக வாகை சூடியது கொல்கத்தா.
நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 ரன்களில் வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. பஞ்சாப் அணிக்காக ஷஷாங் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இறுதி ஓவர் வரை இலக்கை எட்ட போராடி இருந்தது அந்த அணி.
பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இரண்டாவது இன்னிங்ஸில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல் டி20 தொடரில் வரும் 28-ம் தேதி சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (25-ம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
"டி20 உலகக் கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல. அவர் சோர்வாக உள்ளார். எனினும் தோனி வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்பது தெரியாது" என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 என்ற குறைந்த ஓவர் வடிவமாகட்டும், 50 ஓவர்களாகட்டும் டெஸ்ட் போட்டியாகட்டும் ஒரு விளையாட்டு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. இதை வெற்றிக்காக ஒற்றைப் பரிமாணத்திற்குக் குறுக்கக் கூடாது
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை - சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தவர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், 2 கேட்ச்களையும் பிடித்திருந்தார். அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் 5-வது வீரராக அவர் இணைந்தார்.
உலக அளவில் அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி என புகழாரம் சூட்டியுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஸல். நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோனி, பேட் செய்ய களம் கண்டார். அப்போது சேப்பாக்கத்தில் போட்டியை பார்த்து ரசித்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
எதிர்வரும் 18-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இடம் பெற்றுள்ளார்.