தனுஷின் நடிப்பில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ராயன்.படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வரும் நிலையில் படத்திற்கு நல்ல வசூலும் இருந்து வருகின்றது. இதையடுத்து ராயன் படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை பற்றி ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்
மருதமலை முருகன் கோவில் செல்லும் படிக்கட்டு பாதையில் ஒற்றை காட்டு யானை மூன்று மணி நேரம் முகாமிட்டு இருந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின்னர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தற்போது உக்ரைன் செல்ல உள்ளார்.
நேற்றைய தினம் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்நிலையில் இன்று தடாலடியாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதே போல் டீசலும் விலையும் அதிகரித்துள்ளது.
கேரளா - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் ரயில் நிலையங்கள், நேர அட்டவணை, வாரத்தில் எந்தெந்த நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இது ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதியை ஒப்பிடும் போது கனிமொழியின் அரசியல் அனுபவம் எவ்வளவு பெரியது.. ஆனால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம். கொடுக்க மாட்டார்கள். இதுதான் திமுக என வானதி சீனிவாசன் கூறினார்.
ஆகஸ்ட் 1 முதல் 14 ஆம் தேதி வரை 27 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் எனவும், தாம்பரம் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
NEET UG Revised Result and Rank Result 2024 ; உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின் படி, திருத்தப்பட்ட முடிவுகள் மற்றும் அகில இந்திய அளவிலான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வெளியான தரவரிசை பட்டியலில் முழு மதிப்பெண் பெற்று 67 பேர் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது வெறும் 17 பேர் மட்டுமே முதலிடம் பிடித்துள்ளனர். மேலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் ஒன்று கட்டமைக்க தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அது பெரும் ஏமாற்றத்தில் முடிந்திருப்பது கவனிக்கத்தக்கது.
NEET UG Revised Result and Rank Result 2024 ; உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின் படி, திருத்தப்பட்ட முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து, அகில இந்திய அளவிலான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வெளியான தரவரிசை பட்டியலில் முழு மதிப்பெண் பெற்று 67 பேர் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது வெறும் 17 பேர் மட்டுமே முதலிடம் பிடித்துள்ளனர்.
பிரேசிலில் உள்ள கடலில் உள்ள சுறா மீன்களை சோதனை செய்ததில் அவை அதிக அளவில் கொக்கைன் போதைப்பொருட்களை உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்த சுறா மீன்கள் போதையில் ஆக்ரோஷமாக மனிதர்களையும், மற்ற கடல் உயிரினங்களையும் தாக்கி வருகின்றன.
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டிய அவசியம் மற்றும் தனக்கிருக்கும் செல்வாக்கு குறித்து பகிர்ந்து கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் லித்தியம் ஏராளமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இது எலக்ட்ரானிக் வாகன செயல்பாட்டில் அடிப்படையான மூலப்பொருளாக இருப்பதால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதை மையப்படுத்தி புதிய தொழில் நிறுவனங்களும் களமிறங்க வாய்ப்புள்ளது.
ஜி.எஸ்.டி சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னெடுத்துள்ள பணிகள் தாமதமாகி வருகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்படியென்ன வேலை நடந்து வருகிறது, அடுத்தகட்ட பணிகள் எப்போது போன்றவை குறித்து விரிவாக அலசலாம்.
NEET UG Revised Result 2024 : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் வினாத்தாள் கசிவு முதல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுப்பி மாணவர்கள் தரப்பில் மறுதேர்வு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மறுதேர்வு நடத்த மறுப்பு தெரிவித்து தீர்ப்பளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, நீட் தேர்வில் குறிப்பிட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது.