உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் ஜெயம் ரவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் “எந்த உதவியானாலும் செய்து தருவேன்” என உறுதியளித்துள்ளார்.
“அனைத்து சமூக மக்களும் வேலைசெய்தால் தான் திரைப்படம் எடுக்க முடியும். அனைவரும் பார்த்தால்தான் வெற்றி பெற முடியும். சினிமா என்பது சாதி, மதம், மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. எந்த ஒரு இயக்குநரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை” என இயக்குநர் ஹரி தெரிவித்தார்.
கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்ற ‘குரங்கு பெடல்’ திரைப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட புகழ் இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற மொழித் திரைப்படங்கள் எப்போதாவது வசூல் குவிப்பதுதான் வழக்கம். தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிறமொழி ஹீரோக்கள் நடித்த சில படங்கள், இப்படி ஹிட்டாகி இருக்கின்றன.
“ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பிட்காயின் மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எர்ணாகுளம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் மீது மரடு பகுதி காவல்து றையினர் புதன்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ‘கில்லி’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பாக ‘கில்லி’ பட நினைவுகளை இயக்குநர் தரணி பகிர்ந்துள்ளார்.
வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்வில் நடிகர் மம்மூட்டிக்கு, மோகன்லால் அன்பு முத்தத்தை பரிசளித்தார். அத்துடன் ‘ஜவான்’ படத்தின் பாடல் ஒன்றுக்கும் நடனமாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.