சிறிலங்கா நாடாளுமன்ற( Parliament of Sri lanka) கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
40 வருடங்கள் பழமையான இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் சில புனரமைப்புகள் தேவைப்படுவதாகவும், அந்த புனரமைப்புகளை கண்டறிந்து அதற்கான பணிகளை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.உடன்ப...
கனடாவில்(Canada) ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(Hardeep Singh Nijjar) கொலை தொடர்பாக மூவர் கைதான விடயம் குறித்து அந்நாட்டு பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கருத்து தெரிவித்துள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்( கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இந்தியாவிற்கும்(India) தொடர்பு இருப்பதாக பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதன் காரணமாக இந்திய - கனடா உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.குடிமக்களின் பாதுகாப்ப...
இந்த நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில்(India) இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.அத்தோடு, முட்டைகளை இறக்குமதி செய்ய பல்வேறு சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முட்டை இறக்குமதி
பிரபல ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் (Bernard Hill) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (5) உயிரிழந்துள்ளார்.எனினும், பெர்னார்ட் ஹில்லின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடல்லை. உடல்நலக்குறைவு காரணமாக 79 வயதில் பெர்னார்ட் ஹில் உயிரிழந்துள்ளதாக டைட்டானிக் படத்தில் இவருடன் நடித்த பார்பரா டிக்சன் (
Barbara Dickson) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் உலகளவில் மிகவும் பிரபலமான திரைப்படமான டைட்டானிக்க...
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சலுகையானது, 60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கே வழங்கப்படவுள்ளது.
கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டதால், அந்தக் காலகட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.தீர்மானம்
இந்த தீர...
நாளை மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை 23 ஆம் நாள் (2024 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள்).
நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது நாளைய தினத்தின் பலனை அறியும் சாத்தியம் உள்ளது.
ஒரு நாள் முன்கூட்டி திட்டமிடுவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சினைகளை சமாளிக்க இயலும். இதற்கமைய, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வரு...
தென் இந்திய நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் (Pandiarajan) இன்று (5) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள
மண்டபமொன்றில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டுள்ளார்.சிறப்பு பட்டிமன்றம்
மக்களுக்கு சினிமாவும், சீரியலும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற
தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய சூழ்நிலையில் பிறகுக்கு உதவி செய்வது
ஆபத்தா? ஆனந்தமா? என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றன.
1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத்
தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தனுக்கு அஞ்சலி செலுத்தும்
நிகழ்வு நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வானது இன்றையதினம்(5) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை
அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.மலர் அஞ்சலி
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்...
அரசியல் என்பது ஒரு மாறும் சமூக அறிவியல் தானே தவிர கணித சமன்பாடு அல்ல என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார்.கொழும்பில் (Colombo) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் மூன்று வீத வாக்குகளை பெற்ற ஜே.வி.பியினால் தற்போது 51 வீத வாக்குகளை பெறமுடியாது என்று கணிதத் துல்லியத்துடன் வாதிடுகிறார்கள்.<...
சிறிலங்கா நாடாளுமன்ற (Sri Lanka Parliament) கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடம் சேதமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளா...
நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ (Thushara Ranadeva) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய (G. Wijesuriya) தனது கரு...
வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை, அடுத்த ஆண்டு முழுமையாக நீக்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதிகரிக்கும் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதற்கான விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே அதன் பரிந்த...
க. பொ. த சாதாரணதரப் பரீட்சை(G.C.E. (O/L) EXAMINATION) பரீட்சார்த்திகளின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்காக 2000 காவல்துறைய உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ(Nihal Thalduwa) குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், இவ்வருடத்திற்கான கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சை நாளை (06) நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையில் (Sri Lanka) தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கற்பிட்டியில் (Kalpitiya) இருந்து கொழும்பு (Colombo), காலி (Galle), ஹம்பாந்தோட்டை (Hambantota) ஊடாக பொத்துவில் (Pottuvil) வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3.0 ஆக அதிகரிக்கக்கூடுமெனவும் அலையின் கால அளவு 12 முதல் 16 வினாடிகள் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்க...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றின் வேதனமாக 1700 ரூபாயை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கொட்டகலையில்(Kotagala) நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் பங்கேற்ற அதிபர் ரணில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாளொன்றுக்கு...
முச்சக்கர வண்டியில் தனது பேத்தி மோதி விபத்து ஏற்படவுள்ளதை தடுக்க முயன்ற பாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு காலி நெடுஞ்சாலையில் பெந்தோட்டை ரொபோல்கொட பிரதேசத்தில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற தனது பேத்தியுடன் வீதியோரம் நடந்து சென்ற பாட்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.ஒரு பிள்ளையின் தாயாரே
பெந்தோட்ட ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய எம்.மாலினி ரூபலதா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மாதாவின் உருவ படத்திலிருந்து இன்று (05.05.2024) அதிகாலை 5:30 மணியிலிருந்து கண்ணீர் வடிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அதிகளவில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்றையதினம்(4)யாழ்ப்பாணம் (Jaffna) இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக அப்பகுதி மக்க...
விஜய ரஜதஹன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் களஞ்சிய அறையில் மயங்கிய நிலையில் கிடந்த சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் இன்று (5) அதிகாலை கதவுகளை உடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மகன் மற்றும் அவரது குடும்பத்தினருடன்<...
கோடை காலம் ஆரம்பமாகி வெயில் சுட்டெரிக்கின்றது.
எனவே, நம் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியமானதாகும்.
வெயிலிருந்து பாதுகாக்க தண்ணீர் குடித்தல், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை உண்ணுதல், மட்டுமன்றி கோடை காலத்தை சமாளிக்க இன்னும் சில வழிமுறைகள் உண்டு.
இந்த வெயிலில் வெளியே செல்லும் போது கறுப்பு நிற குடை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வெளிர் நிற குடைகளை பயன்படுத்துவதால் வெப்பத்திலிருந்து சிறிது பாதுகாப்படையலாம்.சில ...
பிரித்தானியா உள்ளுராட்சித் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகள் அடிப்படையில் பிரதமர் ரிஷி சுனக்கின்(Rishi Sunak) கன்சர்வேட்டிவ் கட்சியை லிபரல் டெமாக்ரட் கட்சி முந்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல கட்டமாக வெளியாகி வருகிறது.இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் 50 கவுன்சில்களை கைப்பற்றி லேபர் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மொத்தமுள்ள 107 கவுன்சில்களில் இதுவரை 106 கவுன்சில்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதில் க...
இலங்கையில் இருந்து ஏராளமான இரத்தினக் கற்களை கடத்த முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை விமானமான யு.எல்.127 மூலம் இந்தியாவின் சென்னைக்கு(chennai) செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பயணியின் பயணப் பொதியில்
சந்தேகத்திற்கிடமான பயணியின் பயணப் பொதியில் 482.02 கிராம் நிறையுடைய பல்வேறு வகையான இரத்தினக் கற்கள் காணப்பட்டன.
எக்ஸ்ரே இயந்திரங்களில் சிக்காமல் இருக்க காபன் தாள்களில் அவ...
இந்தியாவில் (India) இருந்து இலங்கைக்கு (Sri Lanka) பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெங்காயத்தின் விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த விடயம் தற்போது இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய வெங்காயம்விலைவாசி உயர்வைக் ...
யுனெஸ்கோ(UNESCO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின்(United Nations) ஊடாக நினைவாற்றலின் முக்கியத்துவமானது சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha)தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை களனி நாகாநந்தா பௌத்த கற்கைகள் நிறுவக வளாகத்தில் நடைபெற்ற உலகளாவிய மனநிறைவு மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது உலகப் புகழ்பெற்ற மருத்துவக் கல...
கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியை (MS Dhoni )தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன(Matheesha Pathirana) தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,தோனியின் சிறிய அறிவுறுத்தல்கள் கூட மகேந்திர சிங் தோனியின் சிறிய அறிவுறுத்தல்கள் கூட தனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.கிரிக்கெட் வாழ்க்கையின் தந்தையாக<...
கடந்த மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் வாடிவீட்டு விடுதியில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் கூடிக் கதைத்தன. அதிபர்த் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது என்று மேற்படி சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது.ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
அது ஒரு முக்கியமான சிவில் சமூகச் சந்திப்பு. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நிகழ்ந்த அச்சந்திப்பில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த 32 சிவில் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அ...
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே பயணிகள் படகுச் சேவைக்காக ஒரு வருட காலத்திற்குரிய வரிகள் மற்றும் பிற கட்டணங்களுக்கான செலவை ஒரு மாதத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஏற்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஷிப்பிங் கோப்பரேஷன் ஒப் இந்தியா (SCI) மூலம் ஒக்டோபர் 2023 இல் தொடங்கப்பட்ட பயணிகள் படகுச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மே 13, 2024 அன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.தனியார் நிறுவன படகுச்சேவை இது ஷிப்பிங் கோப்பரேஷன் ஒப் இந்திய...
இலங்கையின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோமீற்றர்களே எஞ்சியுள்ளதாக மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாடு சுவிட்ஸர்லாந்தின் (Switzerland) ஜெனீவாவில் (Geneva) உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) கடந்த ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதி...
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி(Delhi) மெயில்(Mail) அறிக்கையின்படி, பிரிஸ்டல்(Bristol) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விரைவ...
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டு நாட்கள்
அதற்கமைய நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத...
வயங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் பத்தாம் தரம் படிக்கும் மாணவன் ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்கான ஒன்பதாம் தர மாணவன் வத்துபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வயங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.ஒரே வகுப்பில் கற்கும் மாணவியுடனான காதல் உறவின் அடிப்படையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காதல் உறவால் இடம்பெற்ற மோதல்மாணவியின் வேறு உறவை அறிந்த பத்தாம் வ...