பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களில் திட்ட சாலைகள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரின் முக்கிய இடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரஅறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப்பிரபலப்படுத்த ‘ராமாயண பாதையாத்திரைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, இனிமேல் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது
கர்நாடகா மாநிலம் தாவணகெரேவில் ‘ஸ்மோக் பிஸ்கட்’ சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து சீன கப்பல், கடந்த 6-ம் தேதி 22 மாலுமிகளுடன் சரக்கு ஏற்றி கொண்டு புறப்பட்டது. அந்த கப்பல் கடந்த 20-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு வந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி தாளாளர் டாக்டர் டி.ரமேஷ்மற்றும் டாக்டர் இ.சேது கிருஷ்ணா,சகுந்தலா சேது கிருஷ்ணா முன்னிலையில் ஆதிபராசக்தி குழுமப் பள்ளிகளின் தாளாளர் பி.தேவி ரமேஷ் குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை திறந்து வைத்தார்.
தபால் மூலம் 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், விண்ணப்பத்தில் பொதுமக்கள் சரியான முகவரியை குறிப்பிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் டி.லட்சுமி நாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது விருப்பப்படி, அவரது உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தானமாக வழங்கப்பட்டது.
காவல் துறையில் மோப்ப நாய் பிரிவில் ‘பெல்ஜியன் ஷெப்பர்டு’ வகையைச் சேர்ந்த 3 நாய்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்குவதில் மோப்ப நாய்களின் பங்கும் உள்ளது.
திருநெல்வேலி பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்
தமிழகத்தில் கடந்த 2021-23 காலகட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) சார்பில் 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகளை கொள்முதல் செய்ய ரூ.1182.88கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து ஏப்.28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 10.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (08558) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சென்றடையும்.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஜுன் 2-வது வாரத்துக்கு தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியால் புத்துயிர் பெற்றுள்ள மல்லர் கம்பம் விளையாட்டுக்கு, அண்ணா விளையாட்டரங்கில் தனித் திடல் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டசிறுவர், சிறுமியர் பயிற்சி பெற்று வருகின்றனர்