Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேநேரம் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர்,“மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை. நாம் ஓட்டு போடுவதோடு, அனைவரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனை உணர்ந்த ஒரு முதலமைச்சர், ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு, காரை தானே ஓட்டிக் வந்து வாக்களித்துள்ளார்.
கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
வாக்களித்த பின் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும். எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்து உள்ளேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள். அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும்.
தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும். முழுமையாக நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறம் சார்ந்த வேள்வி எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
அப்போது, இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “நல்ல பாடம் என்றால் முதல்வர் சொன்னபடி பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும்”என்று தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.வி.எம் எந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடிக்கு தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
எப்போதும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் நடிகர் அஜித், இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துள்ளார். தனது வாக்குச்சாவடியான திருவான்மையூர் மாநகராட்சி பள்ளிக்கு வந்த நடிகர் அஜித் 30 நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
தே.மு.தி.க கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகனும், விருதுநகர் தொகுதியின் வேட்பாளருமான விஜயபிரபாகரன். இளையமகன் சண்முகப்பாண்டியன் ஆகியோருடன் சென்னை சாலிகிரமம் பகுதியின் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த தென்சென்னை தொகுதியின் பா.ஜ.க.வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் – பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் விஜயகாந்த் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழிசை, ஒரு வேட்பாளராக பெருமை மிகு வாக்காளரை சந்தித்தில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
தனது சொந்த் ஊரான சேலம் மாவட்டம் சிலுவைபாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,புதிய தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், இளையஞர்கள் என அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றுகேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது வாக்கை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் உறுதியாக வெற்றி பெறுவேன். அ.தி.மு.க உங்கள் பக்கம் வரும். 2026-ல் அம்மாவின் ஆட்சியை நாங்கள் அமைப்போம். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் ஒரு தேர்தலாக இது அமையும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
“இது சாதாரண தேர்தல் அல்ல. நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார்.
Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் முற்றிலும் பெண் அலுவலர்களே பணிபுரியும் ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியகுளம்
வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸா ருக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்தது. மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தலைமை வகித்து பேசியதாவது
வாக்குச் சாவடிகளுக்கு அருகே அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்
நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகும் தேர்தலாகும்.
தமிழக வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கியுள்ள திமுக, வாக்களித்தபின் பணம் தரப்படும் என உறுதி அளித்துள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்5என்1 எனப்படும் அந்த பறவைக் காய்ச்சல் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகாரை 6 ஆண்டுகளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளி இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம், காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி ஒதுக்கீடுவழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே பணி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவான வகையில், கடந்த பிப். 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி, அனுமதி கோரப்பட்டுள்ளது.